விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வரும் நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்த்து என்பதை பார்ப்போம்.
பழனிச்சாமியை அவரது வீட்டில் சந்திக்கும் கோபி என் மனைவியை நீங்கள் இனிமேல் பார்க்க கூடாது அவரிடம் பேசக்கூடாது என்று சொல்கிறார். இதற்கு பழனிச்சாமி நான் யாரிடம் பேச வேண்டும் பேச கூடாது என்று நான் தான் முடிவு செய்யவேண்டும். அதேபோல் பாக்யா மேடம் என்ட பேசனுமா வேண்டாமானு அவங்கதான் முடிவு பண்ண்ணும் இது எங்களுக்குள் இருக்கும் பர்ஸ்னல் நீங்க உங்க வேலையை பாருங்க என்று சொல்லிவிடுகிறார்.
ஆனாலும் கோபி சத்தம்போட பழனிச்சாமியின் பவுன்சர்கள் உள்ளே வந்து கோபியை வெளியில் அழைத்து சென்றுவிடுகின்றனர். வெளியில் இதை நினைத்து கோபி புலம்பிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் எழில் அங்கு வந்துவிடுகிறார். நீங்க என்ன பண்றீங்க இங்க என்று கேட்க நீங்க யாரும் கேட்கல அதான் நான் கேட்க வந்தேன். எப்படி பாக்யாவை இந்த பனைமரம் பொண்ணும் பார்க்க வராலம் என்று கேட்க எழில் அதிர்ச்சியாகிறார். ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அம்மாவுக்கு புடிச்சிருந்தா நானே கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சொல்கிறார்.
நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு போனவர் தானே உங்களுக்கு ஒரு நியாயம் எங்க அம்மாவுக்கு ஒரு நியாயமா என்று கேட்டு திட்டி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் செல்கிறார். அங்கு பழனிச்சாமியிடம் பேசிவிட்டு இருவரும் வெளியில் கிளம்புகின்றனர். அப்போது எழில் பழனிச்சாமியிடம் சாரி சொல்கிறார். ஆனால் பழனிச்சாமி கோபி பேசியதை நான் அப்போவே மறந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு தயாரிப்பாளரா பார்க்க புறப்படுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் கோபி பழனிச்சாமி பற்றியும், அவர் தயாரிப்பாளர் குறித்தும் பேசிக்கொண்டிருக்கும்போது கோபி பழனிச்சாமி வீட்டுக்கு சென்றதையும், அங்கு பாக்யாவை பொண்ணு பார்க்க வந்த்தாக கோபி நினைத்து பேசியதையும் சொல்ல பாக்யா டென்ஷன் ஆகிறார். அப்போது செல்வியும் நானும் இதேதான் நினைச்சேன். சார் தப்பா எதோ புரிஞ்சிக்கிட்டு பேசிட்டு இருக்கார் என்று சொல்ல எழில் தேவையில்லாமல் எதற்காக அவருக்கு வேறு பொண்ணு பார்க்கனும், உனக்கு புடிச்சிருந்தா சொல்லு எங்க கல்யாணத்தை நானே நடந்தி வக்கிறேன் என்று எழில் சொல்கிறார்.
இதை கேட்டு அதிர்ச்சியாகும் பாக்யா எழில் கன்னத்தில் அறைவிடுகிறார். உனக்கு எப்படி இப்படியெல்லாம் தோணுது. அவரப்பத்தி நான் உன்கிட்ட சொல்லிட்டு தானே இருக்கேன். என் மனதில் அப்படி ஒரு சிந்தனை இருக்கா இல்லையா என்று உனக்கு தெரியாதா? என்று பாக்யா கேட்க சும்மா கேட்டதாக சொல்லி எழில் மன்னிப்பு கேட்கிறார். அடுத்து ராம்மூர்த்தி ஈஸ்வரி இருவரும் பேசிக்கொண்டிருக்க அங்கு கோபி வருகிறார்.
அப்போது ஈஸ்வரி கோபி தலை வலிக்குதா காபி கொண்டு வரட்டுமா என்று கேட்க, வேண்டாம் என்று சொல்லும் கோபி பழனிச்சாமி குறித்து பேச அவர் ரொம்ப நல்ல பையன் என்று ஈஸ்வரி சொல்கிறார். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“