Advertisment

இனியாவுக்கு அப்பாவே இல்லை: உண்மையை உடைத்த ஈஸ்வரி; வலுக்கும் அம்மா - மகன் மோதல்!

பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவுக்கு அப்பாவே இல்லை என்று ஈஸ்வரி சொல்ல, கோபி வீட்டிற்கு வந்து சண்டை இழுக்கிறார்.

author-image
WebDesk
New Update
Baakiyalkshm

கோபி - ஈஸ்வரி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலின் அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கோபி இனியாவின் அப்பாவே இல்லை என்று ஈஸ்வரி கூறியுள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கை போராட்டத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பாக்யா கோபி ராதிகா ஆகிய 3 கேரக்டர்களை அடிப்படையாக கொண்ட இந்த சீரியிலல், கோபியின் 2-வது மனைவி ராதிகா, கோபி அம்மா ஈஸ்வரி மீது பொய் புகார் கொடுத்ததும், அதை ராதிகாவின் மகளே இல்லை என்று சாட்சி சொன்னதும் பரபரபபின் உச்சமாக இருந்தது.

இதற்காக ராதிகாவின் மகள் மயூவை பாக்யா கோர்ட்க்கு அழைத்து வந்ததை ஏற்றுக்கொள்ளாத ராதிகா, பாக்யாவிடம் சவால் விட்ட நிலையில், கடந்த வாரம் இனியாக பப்புக்கு போய் மாட்டிக்கொள்ள, அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க விடாமல் ராதிகா பார்த்துக்கொண்டதால், தற்போது ராதிகா ஹீரோவாகிவிட்டார். இனியா மாட்டிக்கொண்ட விஷயம் தெரிந்த கோபி ராதிகா பற்றி பெருமையாக நினைத்தக்கொண்டார்.

தொடர்ந்து நேற்றைய எபிசோட்டில், இனியா உன்னுடன் இருந்தது போதும் இனிமேல் நான் அவளை பார்த்துக்கொள்கிறேன் என்று பாக்யாவிடம் சொல்ல, குடும்பமே கோபியை வெளியில் போக சொன்னது, இனியாவும் நான் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டாள். இதனிடையே தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், கோபி இனியாவின் அப்பாவே இல்லை என்று ஈஸ்வரி இனியாவின் கல்லூரியில் சொல்லிவிட்டு வந்துள்ளதாக காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. 

ப்ரமோவின் தொடக்கத்தில் பப்புக்கு போன அனைவரையும் நீங்கள் உங்கள் பெற்றோருடன் வர வேண்டும் என்று சொல்ல, இனியாக கோபிக்கு போன் செய்கிறாள். அப்போது கோபி அப்பா நான் இருக்கேன்டா நான் வரே என்று சொல்கிறார். அடுத்த காட்சியில், ஈஸ்வரி ராமமூர்த்தி பாக்யா இனியா அனைவரும் கல்லூரியில் இருக்கின்றனர். அப்போது ப்ரின்ஸ்பால் நீங்க டிசி வாங்கிட்டு வேற காலேஜ் போய் சேருந்துடுங்க என்று சொல்ல, இந்த ஒருமுறை மன்னித்துவிடுங்கள் என்று பாக்யா கெஞ்சுகிறாள்.

அப்போது ப்ரின்ஸ்பால், இனியா அப்பா எங்கே என்று கேட்க, இனியாவுக்கு அப்பா இல்ல. அவன் வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டான் என்று சொல்கின்றனர். அதன்பிறகு அனைவரும் வீட்டில் இருக்க அங்கு வரும் கோபி, எனனை உங்கள் மகன் இல்லை என்று சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்க, ஆனா நான் இனியாவுக்கு அப்பா இல்லை என்று சொல்ல உங்க யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்ல அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment