/indian-express-tamil/media/media_files/dwlVgzckgwC33uGatcK4.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
இதுவரை எதிரும் புதிருமாக இருந்த பாக்யா – ராதிகா இருவரும் இனி வரும் எபிசோடுகளில் ஒன்றாக இணைவார்கள் என்பது இன்றைய ப்ரமோ மூலம் தெரியவந்துள்ளது. செழியன் பிரச்சனைக்கு வீடே பாக்யாவை குறை சொல்ல, ராதிகா பாக்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கலான சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், பாக்யாவை விவாரத்து செய்த கோபி, ராதிகாவை திருமணம் செய்துகொண்டதால், நண்பர்களாக இருந்த பாக்யா – ராதிகா இருவரும் எதிரிகளாக மாறிவிடுகின்றனர்.
தொடர்ந்து பாக்யாவின் முன்னேற்றத்தை தடுக்க ராதிகா – கோபி இருவரும் முயற்சிக்க பாக்யா தனது முன்னேற்றத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆனால் சமீபத்தில் அவரின் கேண்டீன் பறிபோய்விட்டதால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து வருகின்றனர். இதனிடையே மீண்டும் கோபி – ராதிகா இருவரும் பாக்யா வீட்டுக்கு வந்துவிட்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இதனிடையே தற்போது வீட்டுக்கு வந்த மாலினி செழியன் தன்னிடம் பழகியதாகவும், தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அதற்காக ஆதாரங்களை காட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனால் கோபமாக ஜெனி குழந்தையுடன் தனது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனிடையே செழியன் – மாலினி விஷயம் முன்னாடியே தெரிந்தும் அதை வீட்டில் சொல்லாததால் பாக்யா மீது ஈஸ்வரி கோபி இருவரும் பழி போடுகின்றனர்.
அப்போது கை தட்டியபடி என்டரி கொடுக்கும் ராதிகா தப்பு செய்தது செழியன் ஆனா நீங்க அவங்கள குத்தம் சொல்வீங்களா? இவன் தான் ஜெனியின் வாழ்க்கை இந்த குடும்பம் என எதையும் யோசிக்காமல் இப்படி ஒரு தவறை செய்துவிட்டு வந்திருக்கிறான் என்று சொல்ல, ஈஸ்வரி கோபமாகிறார். அடுத்த காட்சியில் பாக்யா சோகத்துடன் உட்கார்ந்திருக்க ராதிகா அவருக்கு டீ எடுத்து வந்து வைத்துவிட்டு அருகில் அமர்கிறார் அத்துடன் முடிகிறது இந்த ப்ரமோ.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.