பாக்கிலட்சுமி சீரியலில், இனியாவின் கல்யாணம் நல்லபடியாக முடிந்த நிலையில், சுதாகர் பாக்யாவின் ரெஸ்டாரண்டை திட்டம் போட்டு பிடுங்கிவிட்டர். மேலும் பாக்யாவை நேரில் சந்தித்து வெறுப்பேற்றி இருந்த நிலையில், கோபியிடம் எனக்கு தெரியாது, எனக்கும் அந்த ரெஸ்டாரன்ட் வாங்கியதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்ல, கோபி, ஈஸ்வரி, செழியன் மூன்று பேரும் பாக்யாவை திட்டுகின்றனர்.
Advertisment
சுதாகர் இன்று பாக்கியா வீட்டிற்கு வந்து குடும்பத்தினர் முன்பு பாக்கியாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்று செய்ய, பாக்கியா தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு நீங்க பணம் தரேன்னு சொன்னிங்களே எனக்கு இப்போ பணம் கொடுங்க என்று கேட்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியான சுதாகர், உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்க, எனக்கு நஷ்டம் வராத அளவிற்கு நீங்க பணம் கொடுங்க என்று பாக்யா சொல்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்தடுத்த எபிசோடுகளுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாக்யா பேங்க்கு சென்று, தனக்கு எவ்வளவு கடன் பாக்கி இருக்கிறது என்று விசாரிக்க, 41 லட்சம் ரூபாய் தர வேண்டியது இருக்கு என்று சொல்கிறார்கள். பிறகு செல்வியுடன் பேசிக்கொண்டு வரும்போது, உனக்கே 41 லட்சம் கடன் இருக்கு இனி நீ கடனை அடைப்பியா இல்லை வேலை கொடுப்பியா என்று செல்வி கேட்கிறாள்.
Advertisment
Advertisements
இதை கேட்ட பாக்யா, நான் உனக்கும் சரி நம்ம கிட்ட வேலை பார்த்தா யாரையும் நான் அப்படியே விட்டுட மாட்டேன் என்று சொல்கிறார். அடுத்ததாக சுதாகர் ஆஃபீசுக்கு செல்லும் பாக்யா, தனது ரெஸ்டாரண்ட்க்கு, 60 லட்சம் வேண்டும் என்று சொல்ல, அதிர்ச்சியில் யோசித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. சுதாகருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ள பாக்யா, அவரிடமே பணம் வாங்கிக்கொண்டு, புதிய பிஸினஸ் தொடங்கி, ஈஸ்வரி, செழியன், கோபி ஆகியோருக்கு செக் வைப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.