விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய (நவம்பர் 21) எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில் பாக்யாவை பார்க்க அவரது வீட்டிற்க வந்திருக்கும் பழனிச்சாமி, உடனே என்கூட கிளம்பி வாங்க என்று சொல்கிறார். இதை கேட்ட பாக்யா எங்கனு சொல்லுங்க சார் என்று கேட்க, நீங்க என்கூட வாங்க மேடம், அவரசமா வெளியில போகனும் என்று சொல்ல, பாக்யா மாமா நான் போய்ட்டு வரட்டுமா என்று ராமமூர்ததியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு புறப்படுகிறார்.
அப்போது கோபி, இவ எங்கே போறா என்று கேட்க, கிச்சனில் இருந்த ராதிகா கரண்டியை காட்டி கோபியை எச்சரிக்கிறார். ராதிகாவை பார்த்ததும் கோபி அமைதியாக பாக்யா பழனிச்சாமியுடன் செல்கிறார். அதன்பிறகு நீங்க பண்றது எதுவுமே சரியில்லப்பா என்று ராமமூர்த்தியிடம் கோபி கேட்க, அங்கிருந்து வரும் ராதிகா அவங்க எங்க போனாதான் உங்களுக்கு என்ன என்று கேட்கிறார். அதன்பிறகு கோபி அமைதியாகிறார்.
அதன்பிறகு பாக்யாவை ஒரு இடத்திற்கு கூட்டி வரும் பழனிச்சாமி, கவர்மெண்ட காண்ட்ராக்ட் எடுத்த நபர் அந்த காண்ராக்டை வேறு ஒருவருக்கு கொடுக்க போறராம் அதை நம்ம வாங்கலாம் என்றுதான் உங்களை இங்கு கூப்பிட்டு வந்தேன் என்று சொல்கிறார். இதை கேட்டு பாக்யா சந்தோஷப்பட, காண்ராக்ட் காரரிடம் இருவரும் பேசுகின்றனர். அதற்கு அந்த நபர் ஒருலட்சம் அதிகமாய் கேட்க, என்ட் ஒரு லட்சம் இல்லையே என்று சொல்கிறார்.
அதன்பிறகு பழனிச்சாமி 50 ஆயிரம் கொடுப்பாங்க என்று சொல்ல, அவர்களும் ஒப்புக்கொண்டு காண்ராக்டடை அவரிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறார்கள். அதன்பிறகு வீட்டில் இருக்கும் ஈஸ்வரியிடம் சாப்டீங்களா என்று விசரிப்பது போல் பாக்யா பழனிச்சாமியுடன் சென்றிருப்பதை போட்டு கொடுக்கிறார் கோபி. ஆனால் ஈஸ்வரி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது போல் பேசுகிறார். அப்போது அமிர்தா பாக்யா எதற்காக வெளியில் போயிருக்கிறார் என்பதை சொன்னதும் கோபி குழப்புகிறார்.
இதனிடையே காண்ட்ராக்ட் காரர்களுக்கு பணம் எப்படி கொடுப்பது என்று பாக்யா யோசித்துக்கொண்டிருக்க, பழனிச்சாமி நானே பணம் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். இதை கேட்ட பாக்யா வேண்டாம் என்று மறுத்தாலும், பழனிச்சாமியின் வற்புறுத்தலாம் சம்மதிக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“