Advertisment

தைரியமாக கேள்வி கேட்கும் பாக்யா... அதிர்ச்சியில் கோபி – உண்மை தெரிய வருமா?

பாக்யா கோபியின் நடவடிக்கையை பார்த்து சந்தேகமடைந்து கோபியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிர்ச்சியடைய வைக்கிறார்.

author-image
WebDesk
New Update
தைரியமாக கேள்வி கேட்கும் பாக்யா... அதிர்ச்சியில் கோபி – உண்மை தெரிய வருமா?

பாக்கியலட்சுமி சீரியலில் கணவர் கோபி மீது சந்தேகப்படும் பாக்யா அவரை மடக்கி மடக்கி கேள்வி கேட்பதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் சமீப எபிசோடுகள் பெரும் பரபரப்பை ஏறபடுத்தி வருகிறது கோபி பாக்யாவின் கணவர் என்று தெரிந்துகொண்ட ராதிகா கோபியை விட்டு விலகி செல்கிறார். ஆனால் ராதிகாவின் அம்மா கோபிக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் ராதிகா தனது முடிவில் தெளிவாக இருக்கிறார்.

மறுபுறம் கோபியும் ராதிகாவை விடுவதாக இல்லை. ராதிகா எவ்வளவுதான் திட்டினாலும் அவளை சந்திப்பதை நிறுத்தாத கோபி அந்த கோபத்தை தனது வீட்டில் காட்டுகிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பாக்யா கோபியின் நடவடிக்கையை பார்த்து சந்தேகமடைந்து கோபியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு கோபியை அதிர்ச்சியடைய வைக்கிறார்.

இதனிடையே நேற்யை எபிசோட்டில் கோபி ராதிகா கல்யாணம் இன்னும் 3 மாதங்களில் நடைபெறும் என்று ராதிகாவின் அம்மா சொல்லிவிடுகிறார். ஆனால் இதில் விருப்பம் இல்லாத ராதிகா அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த எபிசோடுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் கோவிலில் பாக்யாவை சந்திக்கும் ராதிகா கூடிய விரைவில் மும்பைக்கு கிளம்ப இருப்பதாக கூற நீங்கள் ஒருவரை கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தீங்களே என்று பாக்யா கேட்கிறார். அதை பற்றி பேச வேண்டாம் என்று ராதிகா கூறுகிறார். அதுமட்டுமில்லை இனிமேல் உங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இருக்காது என பாக்யாவிடம் கூறுகிறார்.

இதை கேட்டு பாக்யா கண்கலங்குகிறார் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோ மூலம், ராதிகா நிரந்தரமாக  கோபியை பிரிய முடிவு  எடுத்து விட்டார் என தெரிய வந்தது. ஆனாலும் ராதிகா சென்றுவிட்டால் அடுத்து கதை எப்படி பயணிக்கும் என்றும் யோசிக்க வைக்கிறது.

அதேபோல் இன்றைய எபிசோட்டில் கோபியின் போனை எடுத்து பாக்யா செக் பண்ண அப்போது கோபி வந்துவிடுகிறார். போன் எடுத்தது குறித்து கோபி சண்டை போட, கோபப்படும் பாக்யா, யாரிடம் கோபி இரவில் போன் பேசுறீங்க என்று கேட்க, வழக்கம் போல் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்.

ஆனாலும் ஆத்திரத்தில் பாக்கியாவை கோபி திட்டினாலும், பாக்கியா விடாமல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும்? கோபி எல்லா உண்மையும் சொல்லி விடுவாரா? இல்லை வழக்கம் போல் கோபி எஸ்கேப் ஆகி விடுவாரா? என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment