/indian-express-tamil/media/media_files/3b2CfJtnFskt8QvTlcfs.jpg)
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு தொடக்கத்தில், ஜெனியை பார்க்க வரும் அவரது அம்மா மரியம், தாத்தா இறந்தது, ரெஸ்டாரண்ட் பிரச்சனை, என ஜெனி மகிழ்ச்சியாக இல்லை. ஒரு மருமகளா அவள் இந்த வீட்டுக்கு உண்மையாக இருந்தாலும், ஒரு அம்மாவாக என் மகளின் சந்தோஷத்தை நான் பார்க்க வேண்டும். அதனால் ஜெனியை கொஞ்சநாள் என் வீட்டில் வைத்து பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். இதற்கு பாக்யா, ஈஸ்வரி இருவரும் ஓகே சொல்கின்றனர்.
இதை கேட்ட ஜெனி, இது உங்க முடிவா ஆண்டி என்று பாக்யாவிடம், கேட்க, உங்க அம்மாவுக்கு 10 நாட்கள் கல்லூரி விடுமுறை என்பதால் நீ போய்ட்டு வா என்று பாக்யா சொல்கிறாள். அதன்பிறகு ஜெனியை அழைத்து சென்று சமாதானப்படுத்தி அழைத்து வரும் மரியம், அவளை தன் வீட்டுக்கு அழைத்து செல்ல தயாராக, ஜெனி மீண்டும் பாக்யாவிடம், வாக்குவாதம் செய்கிறாள். இந்த வீட்டில் பிரச்னை நடக்கும்போது இனியாவை ஹாஸ்டலில் விடுவீங்களா என்று கேட்கிறாள்.
இதை கேட்டு அதிர்ச்சியாகும் பாக்யா, அவளை சமாதானப்படுத்த, நான் இந்த வீட்டில் இருந்து வர முடியாது. ஆண்டிக்கு இப்போது பிரச்னை, அதனால் அவரை விட்டுவிட்டு என்றால் வர முடியாது. எனக்கு ஒரு பிரச்னை வரும்போது ஆண்டிதான் எனக்கான வந்து நின்னாங்க, இப்போ நான் அவங்க கூட நிற்க வேண்டும் என்று சொல்ல, இதை கேட்ட பாக்யா, நீ எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்லிவிடுகிறாள். அதன்பிறகு பாக்யாவும் செல்வியும் ரெஸ்டாரண்ட் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
அப்போது பழனிச்சாமி எழிலுடன் அங்கு வர, பணமெல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா, நான் தரவா என்று பழனிச்சாமி கேட்க, பாக்யா வேண்டாம் என்று சொல்லிவிடுகிறாள். இதன் பிறகு செழியனிடம் போன் செய்து பேசும், ஜெனி, ஆண்டி பிரச்சனையில் இருக்கும்போது நீ என்ன செய்ய போற, சேவிங்கில் இருக்கும் பணத்தை கொடு என்று சொல்கிறாள். ஆனால் அது நம்ம எமர்ஜென்சிக்கு தேவைப்படும் என்று செழியன் சொல்ல, அப்போது எச்.ஆர் அவனை அழைத்து உனக்கு இனி வேலை இல்லை என்று சொல்லிவிடுகிறார். இதனால் செழியன் அதிர்ச்சியாக அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.