Advertisment

வீட்டுக்குள் நுழைந்த மாலினி... அடி வாங்கிய செழியன் : பாக்கியலட்சுமி சீரியலில் இன்று

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Malini Jeni Chezhiyan

பாக்கியலட்சுமி சீரியல்

தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாக பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வரும் நிலையில், சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்த்து என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், இனியா காய்ச்சலால் படுத்திருக்கிறார். அவளை பார்க்கும் பாட்டி ஈஸ்வரி, உடம்பு சரியில்லாத மகளை கூட பார்க்க டைம் இல்லையா என்று பாக்யாவை திட்டிக்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மாத்திரை போடாமல் இருந்தால் எப்படி காய்ச்சல் குறையும் என்று சொல்லிக்கொண்டே மாத்திரைய கொடுக்கிறாள்.

அந்த நேரத்தில் கோவிலில் இருந்து வீட்டுக்கு வரும் பாக்யாவை பார்த்து உனக்கு குழந்தை மீது அக்கரையே இல்லையா என்று கேட்கிறார் ஈஸ்வரி். இதை கேட்டு எப்போதும்போல் மாமியாரை சமாதானம் செய்யும், பாக்யா, செழியனை அழைத்து உன்னிடம் கொஞ்சம் தனியா பேசனும் வா என்று அழைத்து செல்கிறார். இதை கேட்டு ஈஸ்வரி என்ன பிரச்சனை என்று விசாரிக்க, செழியனை மட்டும் கூட்டிக்கொண்டு போகிறார் பாக்யா.

தனியாக ரூமுக்கு அழைத்து வந்த செழியனிடம், இப்போ தான் மாலினியை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்ல, செழியன் வழக்கம்போல் தனக்கு எதுவும் தெரியாது என்று மழுப்பலாக பதில் சொல்கிறான். இதனால் கோபமான பாக்யா போட்டோவை காட்டி அவனை அடிக்கிறார். அப்பாவுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்க, உனக்கு தெரியாமதான் இந்த போட்டோ எழுத்தாங்களா என்று கேட்கிறார் பாக்யா.

மேலும் இந்த விஷயத்தை ஜெனிக்கிட்ட சொல்லி மன்னிப்பு கேளு என்று பாக்யா சொல்ல, செழியன் அதிர்ச்சியாகிறார். அதன்பிறகு பாக்யா கிச்சனில் செல்வியுடன் பேசிக்கொண்டிருக்க, வீட்டுக்கு தேவையான பொருட்களுடன் வரும் ராதிகா பொருட்களை டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறார். அதன்பிறகு நானும் சமைக்கனும், இடையில் கொஞ்சம் டைம் கொடுத்தால் எனக்கும் கோபிக்கும் சேர்த்து சமைத்துக்கொள்வேன் என்று சொல்கிறாள்.

அடுத்து செழியன் ஜெனியிடம் மாலினி குறித்த விஷயத்தை சொன்னால் என்னவாகும் என்று நினைத்துக்கொண்டே அவளிடம் சொல்ல முயற்சி செய்கிறான். அதன்பிறகு பாக்யா ஈஸ்வரிக்கு காபி கொடுக்க, ஈஸ்வரி தனக்கு வேண்டாம் என்று சொல்கிறார். கோபியும் ராதிகா இப்போதான் காபி கொடுத்ததாக சொல்கிறார். இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது மாலினி அதிரடியாக வீட்டிற்குள் நுழைகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment