இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisment
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பாக்யா கோபி ராதிகா இந்த 3 கேரக்டர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரயலில் 3 குழந்தைகளுக்கு அப்பாவனா கோபி பாக்யா உடனான வாழக்கை பிடிக்காமல் அவரை விவாகரத்து செய்துவிட்டு மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் இந்த திருமணத்திற்கு பிறகு தற்போது நடக்கும் பல சம்பவங்களை வைத்து பார்க்கும்போது பாக்யாவே நமக்கு பெட்டர் என்று கோபி யோசிக்க தொடங்கிவிட்டார். குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்ட இந்த சீரியல் பெங்காலியில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்ற ஸ்ரீமொயி என்ற தொடரின் ரீமேக்காகும். ஆனால் அப்படியோ ரீமேக் செய்யாமல், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபகாலமாக ராதிகாவின் செயலால் விரக்தியடையும் கோபி குடிப்பழக்கத்திற்கு அடிடையாகிவிட்ட நிலையில், ராதிகா மற்றும் மயூவுடன் பாக்யா தங்கியிருக்கும் அதே வீட்டில் கோபியும் குடியேறிவிட்டார். இதனால் ஈஸ்வரிக்கும் ராதிகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவங்கள் பாக்யாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் ஈஸ்வரியின் பேச்சுக்கு ராதிகா பாக்யாவிடம் சண்டை போடுகிறார்.
இதனிடையே இங்கிலீஷ் க்ளாஸ்க்கு செல்லும் பாக்யா அங்கு பழனிச்சாமியிடம் அறிமுகமாகி நட்பை வளர்க்கிறார். ஆனால் இதை சந்தேக கண்ணோட்டத்தோடு பார்க்கும்கோபி இதை வீட்டில் சொல்லி வாங்கிக்கட்டிக்கொள்கிறார். இந்நிலையில் பாடம் சொல்லிக்கொடுப்பதில் மயூ இனியா இடையே போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், கோபி இனியாவுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதால் ராதிகா கோபியை அடித்துவிடுகிறார்.
இதனால் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய புகைப்படத்தில், கோபி பாக்யா இருவரின் புகைப்படத்துடன் சுபம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பாக்கியலட்சுமி தொடர் விரைவில் முடிவடைய உள்ளதாக ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆனால் ரசிகர்கள் மனம் கவர்ந்த பாக்கியலட்சுமியை அவ்வளவு சீக்கிரம் முடித்துவிட மாட்டார்கள் என்று ஒரு சில ரசிகாகள் கூறி வரும் நிலையில், சிலர் நல்ல விஷயம் தான் சீக்கிரம் முடிங்க என்று கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil