Advertisment

அத்து மீறிய கோபி... ஈஸ்வரிக்கு பதிலடி கொடுத்த செழியன் : ராதிகா சப்போர்ட் யாருக்கு?

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi.j

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கிலட்சமி சீரியல் நாளுக்கு நாள் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரையும் சேர்ந்து வைத்து பேசியதற்காக கோபி தனது மகன்களிடம் நல்லா வாங்கிகட்டிக்கொண்டிருக்கிறார்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில் கோபி, பழனிச்சாமி – பாக்யா இருவரையும் சேர்த்து வைத்து கண்டபடி பேச, என்னை கேட்க நீங்க யாரு இது என் வீடு முதலில் வெளியே போங்க என்று பாக்யா கோபியிடம் சொல்ல, கோபி கடுப்பாகிறார். அதன்பிறகு ஈஸ்வரி வந்ததும் நான் வெளியில் போறேன்மா என்று சொல்ல, ஈஸ்வரி உடம்பு சரியில்லனு ரெஸ்ட் எடுக்கத்தானே இங்க வந்த என்று கேட்க, கோபி நடந்ததை சொல்கிறார்.

இதை கேட்டு, அதிர்ச்சியாகும், ஈஸ்வரி எப்படி என் மகனை வெளியில் போக சொல்லலாம் என்று கேட்க அவர், என்னையும் பழனிச்சாமியும் சேர்த்து வச்சி என்ன பேசினார் என்று அவரையே கேளுங்கள் என்று பாக்யா சொல்ல, பழனிச்சாமியாலதான் எல்லா பிரச்சனையும். யாரும் இல்லாத நேரத்துல அவன் எதுக்கு இங்க வரனும் அக்கம்பக்கத்தில் இருப்பர்கள் தப்பா பேசுவாங்கனு கோபி சொல்லிருப்பான் என்று சொல்கிறார் ஈஸ்வரி்.

இவரை தவிர மற்ற யாரும் என்னை தப்பா பேசல என்று பாக்யா சொல்ல, எங்க அம்மாவை பற்றி பேச நீங்க யாரு என்று எழில் கோபிடம் சண்டைக்கு போகிறார். கோபியும் எதிர்த்துக்கொண்டு சண்டைக்கு போக எழில் நீ அமைதியா இரு நான் பேசிக்கிறேன் என்று பாக்யா சொல்ல, மேலே இருந்து வரும் செழியன் யாரும் இல்லாதப்போ பழனிச்சாமி வந்தார்னு யார் சொன்ன, அவர் வரும்போது நான் இருந்தேன். சொல்லப்போன அவர் முதலில் என்டதா பேசினார்.

சொல்லாம வந்ததுக்கு சாரி கூட சொன்னாரு என்று சொல்ல, நீ உங்க அம்மாவுக்கு சப்போர்ட் வாங்காத உங்க அம்மா நினைச்சிருந்தா உன்ன ஜெனி கூட சேர்த்து வைச்சிருக்கலாம் என்று சொல்ல, அதை பத்தி நீங்க பேசாதீங்க பாட்டி, நான் தப்பு பண்ணே இப்போ அனுபவிக்கிறேன் என்று செழயன் பதிலடி கொடுக்கிறான். இவர் பேசுனதுல பாதிகூட அம்மா சொல்லல. முழுசா சொல்லிருந்தா அவ்வளவு தான் என்று சொல்கிறான்.

இதை கேட்ட எழில், என்ன சொன்னார் சொல்லு என்று கேட்க, வேண்டாம்ட அதை சொல்லவே வாய் கூசுது என்று சொல்ல, அந்த நேரத்தில் இனியா ராதிகா இருவரும் ஒன்றாக உள்ளே வருகின்றனர். அப்போது தனக்கு சப்போர்ட் பண்ணி பேசும்படி ராதிகாவிடம் சொல்லும் கோபி, இந்த நியாயத்தை நீயே கேளு என்று சொல்ல, அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment