Vijay TV Serial: பாக்யா வீட்டுக்கு வரும் ராதிகா மகள்; வசமாக சிக்கும் கோபி?

Baakiyalakshmi Serial : விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல் ப்ரமோ தற்போது சீரியல் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Baakiyalakshmi Serial : விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல் ப்ரமோ தற்போது சீரியல் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: பாக்யா வீட்டுக்கு வரும் ராதிகா மகள்; வசமாக சிக்கும் கோபி?

Baakiyalakshmi Serial Promo Review : விஜய் டிவியின் பாக்கிய லட்சுமி சீரியல் நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். குடும்ப தலைவி ஒருவர் தன் குடும்பத்திற்க்காக வாழ்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து வெளியாகி வரும் இந்த தொடர் இல்லத்தரசிகளின் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீரியலுக்கா காத்திருக்கும் ரசிகர்கள் அடுத்த நாள் எபிசோடுக்கான பிரமோவுக்காகவும் காத்திருக்கும் நிலைக்கு வந்து விட்டனர். அந்த அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த சீரியலின் பிரமோவில் இன்று என்ன நடக்கிறகு என்று பார்போமா?

Advertisment

குடும்பம் மற்றும் மனைவிக்கு தெரியாமல் தனது முன்னாள் காதலி ராதிகாவுடன் கோபி பழகி வருவது அவரது மகன் எழிலுக்கு தெரிந்துவிட, எழில் தனது அப்பாவை மிரட்டி அம்மாவின் மசாலா கம்பெனிக்கு அனுமதி வாங்கிய நிலையில், ராதிகா உடனான தொடர்பையும் துண்டிக்க வேண்டும் என்று கோபி முடிவு செய்கிறான். ஆனால் இது தெரியாத ராதிகா கோபிக்கு போன் செய்து பார்க்கிறாள். ஆனால் அவன் போன் எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் விரக்தியடையும் ராதிகா 'இனி நான் உன்னை டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்' என கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சியடையும் கோபி, 'என் குடும்பமே என்னை விட்டு போனாலும் பரவாயில்லை. நான் உன்னை விட்டு போகமாட்டேன்' என ராதிகாவின் வீட்டுக்கே சென்று சொல்கிறான. இத்துடன் ப்ரமோ முடிவடையும் நிலையில், தற்போது மற்றொரு புரமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவில் ராதிகாவை சந்திக்க வேண்டும் என்று கணவர் கோபியை அழைத்துக்கொண்டு ராதிகா வீட்டிற்கு புறப்படுகிறாள் பாக்யா. ஆனால் இதில் இருந்து தப்பிக்க எண்ணும் கோபி, ராதிகாவின் வீட்டு வாசலில் பாக்யாவை இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து புறப்படுகிறான்.

தொடர்ந்து ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் பாக்யாவிடம், தனது கணவரின் தொல்லை குறித்து ராதிகா கூறுகிறாள். இதனால் பரிதாபபடும்  பாக்யா, நீங்கள் எங்களது வீட்டில் வந்து இருங்கள் என்று கூறுகிறாள் ஆனால் பாக்யாவின் அழைப்பை ராதிகா மறுக்க, குழந்தையாவது எங்களது வீட்டில் இருக்கட்டும் என்று ராதிகாவின் மகளை பாக்யா தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறாள். வீட்டிற்கு தெரியாமல் ராதிகாவிடம் பழகி வரும் கோபி, வீட்டிற்கு வரும் ராதிகாவின் குழந்தையிடம் சிக்குவாரா என்று பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: