Baakiyalakshmi Serial Today Episode Update : கர்ப்பமாக இருக்கும் ஜெனியை அழைத்துக்கொண்டு பாக்யா செழியன் இருவரும் டாக்டரிடம் செல்கிறன்றனர். அங்கு டாக்டர் கர்ப்பம் ஆகி 60 நாட்கள் ஆகியுள்ளதாக கூறி மருந்து மாத்திரை எல்லாம் கொடுக்கிறார். அப்போது பாக்யா ஜெனி இருவரும் சந்தோஷப்பட செழியன் சோகமாகவே இருக்கிறான். அதன்பிறகு ஹாஸ்விடலில் இருந்து வெளியில் வரும் செழியனிடம் மருந்து வாங்கி வர சொல்கிறாள் பாக்யா. சிறிது நேரம் யோசிக்கும் செழியன் பிறகு செல்கிறான்.
அதன்பிறகு வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெனியின் அப்பா அம்மா வருகின்றனர். அப்போது அங்கு வரும் செழியன் அவர்களை வரவேற்கிறான் அவர்கள் பரிசுப்பொருட்களை அவனிடம் கொடுக்கின்றனர்.அப்போது செழியன் சோகமாக இருப்பதை பார்த்து ஜெனி வருத்தமடைகிறாள். இதற்கிடையெ அமிர்தா வீட்டில் அவரது அப்பா அம்மா இருவரும் எழிலை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது எழில் அங்கு வர இருவரும் வரவேறகின்றனர்.
ஊருக்கு போகும்போது வந்த வண்டிக்கு பணம் வாங்கவில்லை என்று அந்த பணத்தை எழிலிடம் கொடுக்கின்றனர். ஆனால் எழில் அதை வாங்க மறுக்க அவனை கட்டாயப்படுத்துகின்றனர். அப்போது நீ இங்க வரது எல்லாம் சரி, அன்பா பேசுறதுக்கு நீ எங்களுக்கு வேணும். ஆன அதுக்காக பணம் செலவு பண்றது எல்லாம் நல்லாருக்காதுபா என்று சொல்கிறார். அதற்கு எழில் கணேஷ் மாதிரினு சொல்லிவிட்டு இப்படித்தான செய்வீங்களா என்று எழில் கேட்கிறான். ஆனாலும் அனைவரும் கட்டாயப்படுத்தி அவனிடம் பணத்தை கொடுக்கின்றனர்.
இதனிடையே ராதிகா வீட்டிற்கு வரும் கோபி மயூக்காக லாலிபாப் வாங்கி வந்து சாப்பிட வைக்கிறான். அப்போது டீச்சர் சாப்பாடு கொடுத்தாங்க நாம டின்னர் சாப்பிடலாமா என்று ராதிகா கோபியிடம் கேட்கிறாள் ஆனால் கோபி வேண்டாம் கொஞ்சம் நேரம் கழித்து சாப்பிடலாம் என்று மறுத்துவிடுகிறாள். அதன்பிறகு பாக்யா வீட்டில் ஜெனி செழியனிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். இனிமேல் ஜெனியை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் என்று செழியனுக்கு அட்வைஸ் பண்ணும்போது எழில் அங்கு வந்து இருவருக்கும் வாழ்த்துக்களை சொல்கிறான்.
அதன்பிறகு செழியன் ஜெனி இருவரும் தூங்க செல்கின்றனர். அவன் போன பிறகு பாக்யா தான் பாட்டி ஆக போவதை நினைத்து எழிலிடம் சந்தோஷப்படுகிறாள். இதனிடையே அறைக்கு வரும் ஜெனி செழியனிடம் கோபமா என்று கேட்க இந்த குழந்தை நமக்கு வேண்டுமா வேண்டாமா என்று யோசித்துவிட்டு வீட்டில் சொல்லியிருக்கலாம் என்று சொல்லும் செழியன் இதை பற்றி அப்புறம் பேசலாம் என்று சொல்லி விடுகிறான்.
இதனிடையே அமிர்தா வீட்டில் கொடுத்த பலகாரத்தை பாக்யாவிடம் கொடுக்கும் எழில் அவர்கள் பணம் கொடுத்த்து பற்றி சொல்கிறான். அது சரியான முடிவுதான் என்று சொல்லும் பாக்யா அந்த பலகாரத்தில் கொஞ்சம் செல்விடம் கொடுத்து அனுப்புகிறாள். அப்போது அங்கு வரும் கோபியிடம் ஜெனி கர்ப்பமாக இருப்பதால சொல்கிறாள் பாக்யா. இதை கேட்டு ஷாக் ஆகும் கோபி வெளியில் காட்டிக்கொள்ளாமல் சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கிறான் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil