/tamil-ie/media/media_files/uploads/2021/05/Baacki.jpg)
ராதிகாவின் பிரச்சினைகளுக்கு உதவும் வகையில், அவரின் குழந்தை மயூவை பாக்யா தனது வீட்டிற்கு அழைத்து சென்றதும், அந்த குழந்தையிடம் சிக்காமல் கோபி தப்பித்து வருவதும் கடந்த ஒரு வாரமாக பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மயூராவிடம் மாட்டக்கூடாது என்பதற்காக வீட்டின் சுவற்றில் மாட்டப்பட்டு இருக்கும் போட்டோக்களை கழட்டிவிட்டு ஆட்களை கூட்டிவந்து பெயிண்ட் அடிக்க சொல்கிறான் கோபி
ஆட்கள் வந்த தங்களது வேலையை தொடங்க வீட்டில் உள்ள அனைவரையும் மேலே செல்ல சொல்கிறான் கோபி. அப்போது ஹாலில் தூங்கிக்கொண்டிருக்கும் மயூவை தானே மாடிக்கு தூக்கிச்செல்வதாக கூறி அவளை தூக்க போகிறான். அந்த நேரம் பார்த்து குழந்தை வழித்துக்கொள்ள, சுதாரித்துக்கொண்ட கோபி, போன் பேசுவது போல கிளம்பிவிடுகிறார். அதன் பின் ஜெனி குழந்தையை உள்ளே கூட்டி சென்றுவிடுகிறார்.
ஆனால் கோபியின் நடத்தை பார்த்து வீட்டில் உள்ள அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்அவர் ஏன் இப்படி செய்கிறார் ஏன் சந்தேகம் எழுப்பும் எழில், போட்டோவால் உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்க, அது பொக்கிஷம், உடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என கூறி கூறுகிறான் கோபி. இதற்கிடையே பெயிண்டர்கள், பெயிண்டிங் அடிக்க 50 முதல் 60 ஆயிரம் வரை செலவாகும் என்று கூற அதிர்ச்சியான கோபி, நாளை பார்த்துக்கொள்ளலாம், நீங்கள் கிளம்புங்கள் என சொல்லிவிடுகிறான்
ஆனால் மயூ தன்தை கண்டுபிடித்துவிட கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கும் கோபி முகமூடி தலையில் கர்ச்சிப் அணிந்து வருகிறார். இதை பார்த்த குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைய, தூசி இருப்பதால் மாஸ்க் அணிந்து இருப்பதாக கோபி சமாளிக்கிறான். அதோடு மட்டுமல்லாமல், அனைவருக்கும் மாஸ்க் கொடுத்து அணிந்துகொள்ள கட்டாயப்படுத்துகிறான்.
ஆனால் கோபியை நோட்டம் பார்க்கும் மயூ 'அங்கிள் உங்களை இங்கேயே பார்த்திருக்கேன்' என சொல்ல, கோபி கடும் அதிர்ச்சி அடைகிறார். 'எனக்கு நியாபகம் வந்துடுச்சி..' என மயூ சொல்லும்போது எபிசோடு முடிவுக்கு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.