பாக்யா - பழனி திருமணம்? கோபிக்கு தெரிய வந்த உண்மை : அடுத்து என்ன நடக்குமோ!

பாக்யலட்சுமி சீரியலில் பாக்யா மீது பழனிச்சாமி காதல் வைத்திருப்பது கோபிக்கு தெரிந்துவிட அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாக்யலட்சுமி சீரியலில் பாக்யா மீது பழனிச்சாமி காதல் வைத்திருப்பது கோபிக்கு தெரிந்துவிட அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Baakiyalashmi Gopi Bas

பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வரும் ஜூன் 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து 2 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள இந்த எபிசோட்டுக்கான ப்ரமோ தற்போது வெளியாக உள்ளது.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டது போல் பாக்யாவுக்கு பழனிச்சாமிக்கும் திருமணம் நடக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்கு ஏற்றார்போல், பழனிச்சாமியின் மனதில் பாக்யா மீது காதல் வந்துள்ள நிலையில், பாக்யா அதை புரிந்துகொள்ளாமல் இன்னும் தோழியாகவே இருந்து வருகிறார்.

பாக்யாவின் உதவியாளராக இருக்கும் செல்விக்கு கூட பழனிச்சாமி பாக்யாவை காதலிப்பது தெரிந்துவிட்ட நிலையில், இது பாக்யாவுக்கு எப்போது தெரியவரும்? அடுத்த பூகம்பம் எப்போது வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதே சமயம் மறுபக்கம், ராதிகா கர்ப்பமாக இருப்பது தெரிந்தும், அங்கு சென்று, ஈஸ்வரி செய்யும் பிரச்சனை, இதற்கு ராதிகாவின் அம்மா பதிலடி கொடுப்பது என கலகலப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

ராதிகாவை நம்பாத கோபி, ஈஸ்வரிக்கு தேவையான அனைத்தையும் செய்கிறான். இதனால் சோர்வான அவன், தற்போது ராதிகா கமலா இருவருக்கும் இடையே மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டு வரும் நிலையில், ஏற்கனவே கோபி வீட்டுக்கு வந்த இனியா விஷம் குடித்து ஹாஸ்பிடலில் இருந்தாள். தற்போது ஈஸ்வரி உடல்நலை சரியில்லாமல் ஹாஸ்பிடல் போய்விட்டு வந்திருக்கிறாள். கோபி வீட்டுக்கு போற எல்லாரும் ஹாஸ்பிடல் போய்ட்டு தான் வருவார்களா என்று விமர்சித்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

இதனிடையே இதுவரை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வந்த பாக்யலட்சுமி சீரியல் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு எபிசோடாக மாலை 3 மணி முதல் 5 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது. இதில் இனியாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்கிறது. அப்போது கோபியும் அதில் கலந்துகொள்ள, பழனிச்சாமியின் அக்கா, அம்மா எல்லோரும் வருகின்றனர். அப்போது பழனிச்சாமியின் அக்கா, பாக்யாவை பழனிச்சாமிக்கு பேசி முடித்துவிடலாம் என்று சொல்ல, அதை கோபி கேட்டுவிடுகிறான். அதன்பிறகு இனியாக கேக் வெட்ட, ராமமூர்த்தி பழனிச்சாமியை அழைத்து இனியாவுக்கு கேட் ஊட்டிவிட சொல்கிறார்.

இதன்பிறகு பாக்யாவிடம் பேசும்கோபி, உனக்கும் பழனிச்சாமிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க போறாங்களாலம். நீயல்லாம் ஒரு அம்மாவா என்று கேட்க நிறுத்துங்க என்று பாக்யா கத்துகிறாள். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: