/indian-express-tamil/media/media_files/7EQvVKjQLKC4HwSydmaN.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தினசரி எபிசோடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்த தவறியதில்லை. அதேபோல் இந்த சீரியலின் ப்ரமோக்களும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொணடாலும், ஈஸ்வரியின் வற்புறுத்தலால் பாக்யாவின் வீட்டில் தங்கியிருந்த கோபி, ராதிகா கர்ப்பமானதால் அங்கிருந்து வெளியேறிவிட்டார். அதே சமயம் பாக்யாவை பழி வாங்க வேண்டும் என்பதால், தனது அம்மா ஈஸ்வரியுடன் வீட்டை விட்டு கிளம்பிவிட்டார். பக்யாவும் இது பற்றி எதுவும் சொல்லாமல் ஈஸ்வரிக்கு வழி விட்டார்.
கோபி ஈஸ்வரியுடன் வந்தது பிடிக்காத ராதிகாவின் அம்மா அவருடன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், சாப்பிடாமல் இருந்த ஈஸ்வரி. உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் தனது மகன்தான் முக்கியம் என்ற சொல்லிவிட்டு கோபியுடனே சென்றுவிட்டார். இதனால் ராமமூர்த்தியும் ஈஸ்வரி குறித்து எதுவும் பேசாமல் இருந்துவிட்டார்.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பான எபிசோட்டில், வீட்டில் தவறிவிழுந்த ராதிகா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில், அவரது குழந்த கலைந்துவிட்டதாக டாக்டர் கூறினார். இதற்கு காரணம் உங்க அம்மாதான் என்ற ராதிகாவின் அம்மா கமலா மற்றும் ராதிகா என இருவருமே சொல்ல, கோபி என்ன செய்வது என்ற தெரியமல் விழித்துக்கொண்டிருந்தார். இதனால் ஈஸ்வரி தொடர்ந்து கோபியுடன் இருப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இன்று மற்றும் நாளைய எபிசோட்டுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் வீட்டுக்கு வரும் கமலா, இன்னும் எந்த முகத்தை வச்சிக்கிட்டு இங்கு இருக்க என்று கேட்டு, எந்த பேர பிள்ளைகளுக்காக எங்க குடும்ப வாரிசை இல்லால் செய்தீர்களே அவர்கள் எல்லாம் நல்லாவே இருக்க மாட்டாங்க என்று சொல்ல, அதை கேட்ட ஈஸ்வரி நான் குழந்தையை கொல்லல என்ற சொல்கிறாள்.
அப்போது குறுக்கிடும் ராதிகா பொய் சொல்லாதீங்க, நீங்கள் குழந்தையை கொல்ல நினைத்தது உண்மை. அதற்காக என்னை தள்ளிவிட்டது உண்மை என்று சொல்ல, அதிர்ச்சியான ஈஸ்வரி, கோபியிடம் என்ன சொல்றாஙகனு பாருடா, எங்க அம்மா அப்பா பண்ண மாட்டாங்கனு சொல்லுடா என்று சொல்ல, எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் நீங்க நினைத்த மாதிரி குழந்தை செத்துப்போச்சில்ல போங்க இன்னும் ஏன் நிக்கிறீங்க போங்க என்ற சொல்லிவிடுகிறான்.
கோபியின் வார்த்தையை கேட்டு மனமுடைந்த ஈஸ்வரி, பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியே வந்து தெரிவில் நிற்க, அங்கே வரும் பாக்யாவை பார்த்து அழுகிறார். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.