ரெஸ்டாரண்டை பிடுங்கிய சுதாகர்: இனியா மூலம் பாக்யாவுக்கு வந்த ஷாக்: அடுத்து என்ன?

பாக்யாவின் ரெஸ்டாரண்டடை பிடுங்கிய சுதாகர், பணம் வேண்டும் என்றால் இனியாவை தான் கேட்க வேண்டும் என்று அதிர்ச்சியை கொடுக்கிறார்

பாக்யாவின் ரெஸ்டாரண்டடை பிடுங்கிய சுதாகர், பணம் வேண்டும் என்றால் இனியாவை தான் கேட்க வேண்டும் என்று அதிர்ச்சியை கொடுக்கிறார்

author-image
WebDesk
New Update
Baakiyakshmi

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யாவின் ரெஸ்டாரண்ட்டை வாங்குவதற்காக, இனியாவை தனது வீட்டு மருமகளாக மாற்றிக்கொண்ட சுதாகர், பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் இருந்து மொத்த ஆட்களையும் சுதாகர் விரட்டி விடுகிறான். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதாபார்ப்பு எழுந்துள்ளது,

Advertisment

இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், ஈஸ்வரி, செழியன், ஜெனி மூன்று பேரும் இனியா வெளிநாட்டிற்கு ஹனிமூன் போவது பற்றி பேசுகிறார்கள்.  அந்த நேரத்தில் வீட்டிற்கு எழில், அந்த ரெஸ்டாரண்ட் உன்னுடையது. அதை லீகலா நாம என்ன பண்ணனுமோ அதை பண்ணலாம் என்று பாக்யாவிடம் சொல்கிறான். பாக்கியா எதுவுமே பேசாமல் வீட்டிற்குள் வருகிறாள்.

அப்போது ஈஸ்வரி பாக்கியாவை பார்த்தது இன்யா வெளிநாட்டுக்கு போவது பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருக்க, பாக்யா அமைதியாகவே இருக்க, வீட்டிலிருந்து அவ்வளவு ஆக்ரோஷமா கிளம்பி போன இப்ப எங்க போயிட்டு வர என்று ஈஸ்வரி கேட்கிறாள். இதற்கு பாக்யா எதுவும் பதில் சொல்லாத நிலையில், ரெஸ்டாரண்டில் இருந்து வரோம் என்று எழில் சொல்கிறான்.

இதை கேட்ட ஈஸ்வரி, ரெஸ்டாரண்ட் எப்படி இருந்தாலும் அந்த மேனேஜ்மென்ட் நீதான கவனிக்க போற எதுக்காக இவ்வளவு எல்லாம் பேசினா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, என்னுடைய ரெஸ்டாரன்ட் விஷயத்தை பற்றி நான் யாரிடமும் பேசப்போவதில்லை என்று பாக்யா சொல்கிறாள். பிறகு ஜெனி பாக்யாவிடம் இனியா வெளிநாட்டுக்கு ஹனிமூன் போவது பற்றி சொல்கிறாள். அதற்கு பாக்யா அப்படியா சரி சந்தோஷம் போயிட்டு வரட்டும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

Advertisment
Advertisements

இதை பார்த்த ஈஸ்வரி பாக்யாவை திட்ட, அப்பா பிசினஸில் உடைந்து போய் இருந்தபோது நீங்க அவருக்கு சப்போர்ட் பண்ணுனீங்க. ஆனால் இப்போ அம்மா நிலைமை அப்படி கிடையாது, நீங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணாம இப்படி பேசிட்டு இருக்கீங்க என்று திட்ட, அதற்கு வழக்கம் போல ஈஸ்வரி ஏழிலை திட்டுகிறாள். அடுத்த நாள் காலை இனியா கணவருடன் வருகிறாள். இருவரும் ஹனிமூன் போவது பற்றி சொன்னதும் பாக்யா சரி போயிட்டு வாங்க என்று சொல்கிறார்கள். அப்போது பாக்யா இனியாவிடம் நலம் விசாரிக்க, அங்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்று இனியா சமாளித்துவிடுகிறாள்.

இனியா கிளம்பியதும் பாக்கியா அங்கிருந்து ரெஸ்டாரண்டுக்கு வர, அங்கு ஏற்கனவே அமர்ந்திருக்கும், சுதாகர் பாக்யாவை பார்த்ததும் இன்று மதியத்தோடு ரெஸ்டாரன்ட் க்ளோஸ்.  இனி என்னுடைய கம்பெனியின் ஆட்கள் எல்லாம் பாத்துக்குவாங்க என்று சொல்ல பாக்யா அதிர்ச்சியாகிறாள். கம்பெனியின் பெயர் மட்டும் தானே மாறும் என்று சொன்னீர்கள் என்று பாக்ய கேட்க, கேட்க, இல்லை நிர்வாகத்தையும் மாற்ற வேண்டும் என்று சொல்லிட்டாங்க.

மேனேஜரா வேலைக்கு சேர்ந்துக்கோங்க உங்களுக்கு சம்பளம் தரேன். நான் கேட்டப்போ தந்திருந்த இவ்ளோ நஷ்டம் இல்லை. ஆனா இப்போ உங்களுக்கு பணமும் இல்லை, இந்த ரெஸ்டாரண்டும் இல்லை என்று சுதாகர் சொல்ல,  நான் இப்போ நினைச்சாலும் நீங்க பணம் தந்து தான் ஆகணும் என்று பாக்கியா சொல்கிறாள். இதை கேட்ட சுதாகர், பணம் வேணும்னு நீங்க உங்க பொண்ணு கிட்ட தான் கேக்கணும். உங்க பொண்ணு கிட்ட பணத்தை கேட்கிற அளவுக்கு நீங்க தரம் தாழ்ந்தவர்கள் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று சுதாகர் பேச, பாக்யா அதிர்ச்சியாக அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. 

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: