இன்ப அதிர்ச்சி கொடுத்த தாத்தா... ஆனாலும் கோபத்தின் உச்சத்தில் கோபி

இந்த வீட்டில் நடந்த மொத்த பிரச்சினையும் இந்த நல்ல செய்தியால் மறந்துவிடும் என ஈஸ்வரி மகிழ்ச்சியாகிறார்

இந்த வீட்டில் நடந்த மொத்த பிரச்சினையும் இந்த நல்ல செய்தியால் மறந்துவிடும் என ஈஸ்வரி மகிழ்ச்சியாகிறார்

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி கோபி

சின்னத்திரையின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில தினங்களாக விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இனியா பேரண்ட்ஸ் மீட்டிங், கோபி ராதிகா காமெடி சண்டை, மயூ கோபியிடம் அப்பா என்று அழைப்பது என பல சுவாரஸ்யமாக காட்கள் அரங்கேறி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபியை அவரது அப்பா ராமமூர்த்தி கலாய்க்கும் காட்கள் சிரிப்பலையின் உச்சம்.

Advertisment

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஜெனி காலையில் எழுந்தவுடன் வாமிட் எடுத்துகொண்டிருக்கிறாள். இதை பார்த்த செழியன் அவரிடம் ஏன் வாமிட் எடுக்கற என்று கேட்டுவிட்டு ரெஸ்ட் எடுக்க சொல்கிறான். அதன்பிறகு கீழே வரும் ஜெனியிடம் பாட்டி ஈஸ்வரி விசாரிக்கிறார். அப்போது 3 நாட்களாக வாமிட் எடுப்பதாக கூறுகிறாள்.

இதை கேட்டு சந்தோஷப்படும் ஈஸ்வரி முதலில் டாக்டரில் சென்று கன்பார்ம் செய்துகொண்டு அதன்பிறகு மற்றவவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். அடுத்து பாக்யாவும், ஜெனியும் டாக்டரிடம் சென்று வருகின்றனர். பாக்யா ஜெனி கர்ப்பமாக இருப்பதாக ஈஸ்வரியிடம் சொல்ல, அவர் மகிழ்ச்சியடைகிறார். மேலும் இந்த வீட்டில் நடந்த மொத்த பிரச்சினையும் இந்த நல்ல செய்தியால் மறந்துவிடும் என்று சொல்கிறார்.

மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ராமமூர்த்தி அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கிறார். தொடர்ந்து கோபி வீட்டுக்கு செல்கிறார். அங்கு கோபியும் ராதிகாவும் இட்லி மாவு அரைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்க சார்ட்ட கொடுங்க மாவு நல்ல அரைப்பாரு என்று சொல்கிறார். இதனால் கடுப்பாகும் கோபியிடம் என் பேரன் அப்பா ஆக போறான் நான் கொள்ளு தாத்தா ஆக போறேன். என்று சொல்ல கோபி சந்தோஷமாகிறான்.

Advertisment
Advertisements

அடுத்து நீ தாத்தா ஆக போற என்று சொல்ல கோபி மீண்டும் டென்ஷன் ஆகிறார். ஆனாலும் வந்த வேலை முடிஞ்சிடுச்சி என்று துள்ளி குதித்துக்கொண்டு தாத்தா சென்றுவிட கோபி தனது அப்பாவை நினைத்து புலம்புகிறார். அடுத்து ஸ்வீட்டுடன் ஆபீஸ் வரும் எழில் அமிர்தாவிடம் ஜெனி கர்ப்பமாக விஷயத்தை சொல்கிறார் அவரும் சந்தோஷப்படுகிறார்.

அதன்பிறகு இவர்கள் இருவரும் தனியாக பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் வர்ஷினி கோபப்படுகிறார் இதனிடையே வீட்டுக்கு வரும் கோபி ஆபீஸ் செல்லும் செழியனிடம் அப்பா ஆக போற செய்தி கேட்டு ரொம்ப சந்தோஷம். வீட்டுக்கு வந்து வாழ்த்தனும் நினைத்தேன். ஆனா இப்போ சூழ்நிலை சரியில்லை என்று சொல்லி வாழ்த்து சொல்லிவிட்டு கிளம்புகிறார் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: