பாக்யாவை அதிர வைத்த இனியா: ஈஸ்வரி கொடுத்த உத்திரவாதம்; மாற்றம் வருமா?

பாக்கியலட்சமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பாக்கியலட்சமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Baakiya Ewas

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தன்னால் இந்த வீட்டில் பிரச்சனை வருகிறது என்று முடிவு செய்த இனியா லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்தபோது, பாக்யாவிடம் சிக்கிக்கொண்டார். இதனால் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

Advertisment

எபிசோட்டின் தொடக்கத்தில், வீட்டை விட்டு வெளியே போவதாக லெட்டர் எழுதிய இனியா, அதை பாக்யா பக்கததில் வைக்கும்போது, தண்ணீர் பாட்டில் தடுக்கி விழுந்து சத்தம் கேட்க பாக்யா விழித்துக்கொள்கிறாள். இனியாவை பார்த்தவுடன் நீ இன்னும் தூங்கலையா என்று கேட்க, தண்ணீர் குடிக்க வந்தேன் என்று இனியா மழுப்ப, பாக்யா மிரட்டி விசாரிக்கிறாள். அப்போது அவளது கையில் இருக்கும் லெட்டரை பார்த்துவிடுகிறாள்.

அது என்ன என்று கேட்க, இனியா கொடுக்க மறுக்க, பிடுக்கி பார்க்கும் பாக்யா, அதில், வீட்டைவிட்டு போவதாக எழுதி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். என்ன காரியம் பண்ணி வச்சிருக்க என்று பாக்யா அடிக்க, அப்போது குழந்தை தூங்காமல் இருந்ததால் வெளியில் வரும் ஜெனி இதை கேட்டுவிடுகிறாள். நம்ம திட்டியதால் செத்துபோய்விடுகிறேன் என்று இனியா லெட்டர் எழுதி வைத்திருக்கிறாள் என்று பாக்யா ஜெனியிடம் சொல்லி அழுகிறாள்.

இதை கேட்ட ஜெனி, ஏன் இனியா தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்க, நாங்க எல்லாரும் உனக்கு துணையாக இருக்கிறோம். ஆனால் நீ அதை புரிந்துகொள்ள மாட்டேங்குற என்று கேட்க, உங்களை புரிந்துகொண்டதால் தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று இனியா சொல்கிறாள். என்னால் தான் எல்லோருக்கும் பிரச்சனை மேல் பிரச்சனையாக இருக்கிறது என்று சொல்கிறாள். இதை கேட்ட பாக்யா, நீ இல்லை என்றால் நான் செத்துப்போய்டுவேன் என்று சொல்லி அழுகிறாள்.

Advertisment
Advertisements

இதை கேட்ட இனியா வழக்கம்போல் தப்பு செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டு இந்த முறை சத்தியம் செய்கிறாள். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பாக்யா ஜெனியிடம் சொல்கிறாள். மறுநாள் காபி போடும் பாக்யா, பால் பொங்குவது கூட தெரியாமல், இருக்க அங்கே வரும் ஈஸ்வரி, என்ன என்று விசாரிக்க, ஜெனியிடம் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்ன பாக்யா, ஈஸ்வரியிடம் இனியா செய்த வேலையை சொல்லி அழுகிறாள்.

மேலும் ரெஸ்டாரண்ட் வேண்டாம் நான் வீட்டிலே சின்னதா எதாவது பண்ணட்டுமா என்று கேட்கிறாள். அதை கேட்ட, ஈஸ்வரி, வேண்டாம் நாங்க வீட்டில் இருந்து எல்லாம் பார்த்துக்கொள்கிறோம். நீ பிஸினஸை பாரு, இனியா இனி தப்பு பண்ணமாட்டா என்று ஆறுதல் சொல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: