கைவிட்ட ராதிகா, ஈஸ்வரியை பார்த்து கடுப்பாகும் கோபி; இதுக்கும் பாக்யா தான் காரணமா?

கோபி ராதிகா இடையே ஏற்பட்ட பிரச்சனையில் வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபிக்கு செக் வைத்துள்ளார் ராதிகா

கோபி ராதிகா இடையே ஏற்பட்ட பிரச்சனையில் வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபிக்கு செக் வைத்துள்ளார் ராதிகா

author-image
WebDesk
New Update
radhika Gopi baakiya

பாக்கியலட்சுமி சீரியலில், ஒரு வழியாக இனியா பிரச்சனை முடிவுக்கு வர, தற்போது கோபி மீண்டும் ஒரு பிரச்சனையை உருவாக்கி அதற்கு காரணமும் பாக்யா தான் என்று சொல்லிக்கொண்டு இருக்க, ராதிகா என்னை டைவர்ஸ் செய்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ராதிகா மயூவை ஸ்கூலுக்கு அழைத்து செல்ல தயாராக இருக்கும்போது கோபி வந்து, நான் மயூவை ஸ்கூலில் ட்ராப் செய்கிறேன் என்று சொன்னாலும் ராதிகா அதை கண்டுகொள்ளவில்லை. அப்போது நம்ம சண்டையை குழந்தை முன்பு ஏன் காட்ட வேண்டும் என்று சொல்ல, ராதிகா சத்தம் போட இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகிறது.

என் வாழ்க்கையில் நீ வந்த பிறகுதான் எல்லா பிரச்சனையும் வந்தது. எங்க அம்மா என்னை விட்டு போய்ட்டாங்க, எனக்கு பல பிரச்சனை வந்தததற்கு முக்கிய காரணம் நீயும் உங்க அம்மாவும் தான் என்று சொல்ல, அதை கேட்ட ராதிகா அப்போ எதுக்காக இந்த வீட்ல இருக்கீங்க, டைவர்ஸ் பண்ணிட்டு போகவேண்டிதானே என்று சொல்ல, கோபி டென்ஷனில் வெளியில் வந்து கார் பக்கத்தில் புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

அப்போது எதிரில் பாக்யா வீட்டில் அனைவரும் நிலாவுடன் விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். சோகமாக இருக்கும் ஈஸ்வரி கூட, நிலாவுடன் சிரித்து விளையாடுவதை பார்த்த கோபி, பாக்யாவும் விளையாடுவதை பார்த்து என்னை இங்கே புலம்ப விட்டுவிட்டு, நீங்க எல்லாம் சந்தோஷமாக இருக்கீங்களா? என் அம்மா என்மீது கோபப்பட முழு காரணமே நீதான் பாக்யா, என்று சொல்லி புலம்பிவிட்டு காரை எடுத்துக்கொண்டு ரெஸ்டாரண்ட் வருகிறார்.

Advertisment
Advertisements

அங்கு கணக்கு பார்த்துக்கொண்டிருக்கும்போது ஊழியர் ஒருவர் போன் பேசிக்கொண்டிருக்க, அதை பார்த்த கோபி, அனைவரையும் கடுமையாக பேசிவிடுகிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் கோபியின் நண்பன் வேலை ஆட்களிடம் எதற்காக கோபத்தை காட்டுற, இப்படி பண்ணா அவங்க வேலையை விட்டுட்டு போய்டுவாங்க என்று சொல்ல, இத்தனை பிரச்சனைக்கும் காரணம் பாக்யா தான் என்று கோபி மீண்டும் பாக்யா மீது பழியை போடுகிறார்.

ராதிகா என்னை மதிக்கிறது இல்லை. என் அம்மா என்னை பிரிஞ்சுட்டாங்க, இது எல்லாத்துக்கும் காரணம் பாக்யா தான். ஆனா அவ மட்டும் சந்தோஷமா இருக்கா என்று சொல்லி புலம்ப, கோபியின் நண்பர் கோபியை திட்டுகிறார். மறுபக்கம் பழனிச்சாமியை ரெஸ்டாரண்டில் சந்திக்கும் பாக்யா அனைத்து விஷயங்களையும் சொல்ல, அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: