Advertisment

ஈஸ்வரி ஆட்டம் ஸ்டார்ட்: கோபத்தின் உச்சத்தில் எழில்; மீண்டும் சிக்கலில் பாக்யா!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசொட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Eawsar3

கோபி வீட்டில் தங்கி அவமானங்களை சந்தித்து தற்போது பாக்யா வீட்டுக்கு வந்துள்ள ஈஸ்வரி மீண்டும் தனது வில்லி வேலையை தொடங்கியுள்ளதாக பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு தொடக்கத்தில், குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி அமிர்தாவிடம் பேசும், ஈஸ்வரி, உன் முதல் கணவன் கணேஷ் மீண்டும் வந்து பிரச்சனை செய்தால், இந்த குடும்பத்தில் இருக்க உனக்கென்று ஒரு பிடிப்பு வேணடும் என்றால் நீ குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்ல, அமிர்தா அழ தொடங்குகிறாள். இதை கேட்ட ராமமூர்த்தி, இப்படியே திட்டிக்கொண்டிருந்தால் அவ்வளவு தான் என ஈஸ்வரியை திட்டுகிறார்.

அதன்பிறகு அழுதுகொண்டே ரூமுக்குள் செல்லும் அமிர்தாவுக்கு பாக்யா ஆறுதல் சொல்ல, நான் இந்த வீட்டில் இருக்குறது எழிலுக்கு பிரச்சனையாக இருக்கிறது. நான் இந்த வீட்டை விட்டு போய்விடுகிறேன். நிலாவையும் கூட்டிக்கொண்டு போய்விடுகிறேன் என்று அமிர்தா சொல்ல, அப்படி சொல்ல கூடாது. உனக்காக ஒட்டுமொத்த குடும்பமும் இருக்கிறது நீ கவலைப்படாதே என்று பாக்யா ஆறுதல் சொல்கிறாள். அடுத்து கோவிலுக்கு செல்லும் அமிர்தா அங்கேயும் ஈஸ்வரி சொன்னதை நினைத்து அழுகிறாள்.

அப்போது எழில் அங்கு வர, நான் எங்க அம்மா வீட்டில் கொஞ்ச நாள் தங்கிட்டு வருகிறேன் என்று சொல்ல, அப்படி நீ சொல்லமாட்டியே என்ன பிரச்சனை என்று எழில் கேட்க, அப்போது அமிர்தா ஈஸ்வரி சொன்னதை எல்லாம் எழிலிடம் சொல்ல, கோபத்தில் எழில், வீட்டுக்கு செல்கிறான். இங்கு பாக்யா செல்வி இருவரும் ஈஸ்வரி பேசியதை கேட்டு வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜெனிக்கும் அமிர்தாவுக்கும் இடையே பிரச்சனை இருந்து இப்போதான் சரியாகி இருக்கு.  

இதில் ஜெனியின் 2-வது கர்ப்பதை வைத்து அமிர்தாவை திட்டுவது என்ன நியாயம்? நான் அத்தைக்கிட்ட பேசனும் என்று பாக்யா சொல்ல, அப்போது எழில் வீட்டுக்கு வந்து, ஈஸ்வரியை கூப்பிட, அமிர்தா எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் எழில், சண்டை போடுகிறான். கோபமான ஈஸ்வரி அமிர்தாவை மீண்டும் திட்ட, எழில் ஈஸ்வரி இடையே வாக்குவாதம் முற்றுகிறது. அப்போது ராமமூர்த்தி ஈஸ்வரியை திட்ட, அப்போது பாக்யா பாட்டியிடம் நான் பேசுகிறேன் நீ மேலே போ என்று சொல்ல, ஈஸ்வரி பாக்யாவை திட்டுகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment