Advertisment

மகனை வெளியே போக சொன்ன பாக்யா; ஈஸ்வரி மாஸ்டர் ப்ளானா இருக்குமோ? சீரியல் அப்டேட்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Baakiya Ewas

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழில் – ஈஸ்வரி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், எழிலை வீட்டை விட்டு வெளியே போக சொன்ன பாக்யா ஒரு முக்கிய கண்டிஷனையும் கொடுத்துள்ளார்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஈஸ்வரி – எழில் இருவரும் காரசாரமாக விவாதம் செய்துகொண்டிருக்கும் நிலையில், அனைவரும் எழிலை சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனாலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, அமிர்தாவின் முன்னாள் கணவன் கணேஷ் வந்து பொண்டாட்டி புள்ளை கேட்ட விட்ருவியா என்று ஈஸ்வரி கேட்கிறார். மேலும் இந்த வீட்டுக்குனு நீ என்ன செஞ்சிருக்க?

வேலைக்கும் போக மாட்டா, குழந்தையும் பெற்றுக்கொள்ள மாட்ட, என்ன வாழ்க்கை வாழுற நீ, என்று கேட்க, பாக்யா எழிலுக்கு ஆதரவாக பேசுகிறாள். அதன்பிறகு எழிலை சமாதானம் செய்து அழைத்து போக, அப்போ எனக்கு மரியாதை அவ்வளவு தானா என்று பாக்யாவை பார்த்து ஈஸ்வரி கேட்கிறார். அதை கேட்ட ராமமூர்த்தி எழிலுக்கு நேரம் சரியில்லை. இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல, இவளுக்கு தான் நேரம் சரியில்லை என்று அமிர்தாவை சொல்கிறார் ஈஸ்வரி.

அமிர்தா ராசி இல்லாதவள், அவள் வந்ததால் தான் எழில் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று சொல்லும் ஈஸ்வரி, நாம சொன்ன பொண்ணை கட்டிருந்தால் இந்நேரம் வீடு வாசல் என்று வசதியா இருந்திருப்பான் என்று சொல்கிறார். அமிர்தா வாழ்க்கையில் எதுவும் உருப்படியா நடக்கல என்று சொல்ல, அனைவரும் ஈஸ்வரியை சமாதானம் செய்ய முயற்சிக்க, ஈஸ்வரி மீண்டும் கோபத்தில் அமிர்தாவை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார். இதை கேட்ட, எழில் அமிர்தா பற்றி தப்பா பேசாதீங்க என்று சொல்கிறான்.

இதை கேட்ட ஈஸ்வரி, மேலும் கோபப்பட, இன்னொரு தடவை எதாவது சொன்ன, நான் எதாவது சொல்ல வேண்டி வரும் என்று சொல்லும் எழில், நான் படம் பண்ணாம போனதற்கு அமிர்தா காரணம் அல்ல, நீங்கதான் காரணம் என்று சொல்கிறான். நான் கதையை சொல்லி படம் எடுக்கும் நேரத்தில் உங்களை தேடி போலீஸ் இங்கு வந்தது. நீங்க கொஞ்ச நேரம் யோசித்து உங்க பிள்ளை கூட போகாம இருந்திருந்தால் நான் படம் பண்ணியிருப்பேன். நீங்க இப்ப சொன்னது எல்லாமே நடந்திருக்கும் என்று சொல்ல, ஈஸ்வரி அதிர்ச்சியில் இருக்கிறார்.

ஆனாலும் கடைசியில் பழியை தூக்கி என்மேல போட்டுடியா என்று ஈஸ்வரி கேட்க, நான் நடந்ததை தான் சொல்கிறேன் என்று எழில் பதிலடி கொடுக்கிறான். நீங்க சொன்ன விஷயம் தப்பு இல்ல, சொன்ன விதம் தான் தப்பு என்று எழில் சொல்ல, என்னால் தான் பிரச்சனை, நான் போகிறேன் என்று நிலாவுடன் அமிர்தா கிளம்ப, ஜெனி அவரை தடுத்து நிறுத்துகிறார். இதை பார்த்த ஈஸ்வரி என்ன நாடகம் போடுறீங்களா? பெரியவங்க பேச்சை கேட்டு இருகிறதா இருந்த இருங்க இல்லனா போங்க, என்று எழிலிடம் சொல்கிறார்.

இதை கேட்ட, எழில் நான் உண்மையாவே போய்டுவேன் எனறு சொல்ல, இந்த வீட்டை விட்டு வெளியே போ அப்போதான் வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பது உனக்கு தெரியும். நிலாவுக்கு ஒருவேளை சாப்பாடு கொடுகக முடியுமா? எல்லா செலவையும் சமாளிக்க முடியுமா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, நீ இந்த வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று பாக்யா சொல்கிறாள். அதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைய அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment