Advertisment

ஈஸ்வரி வைத்த ட்விஸ்ட்: விரட்டி அடிக்கப்பட்ட எழில் - அமிர்தா; பாக்யாவுக்கு இது தேவைதானா?

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
bakiya eawsr

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில், எழில் ஈஸ்வரி இடையேயான வாக்குவாதம் பெரிதாக வெடித்த நிலையில், பாக்யா மகன் எழிலை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், வாக்குவாதம் முற்றிய நிலையில், உன்னால் இந்த வீட்டை விட்டு வெளியே போய் எதுவும் செய்ய முடியாது இந்த வீட்டில் இருப்பதால் தான் இவ்வளவு சொகுசா இருக்க என்று சொல்ல, இதை கேட்ட பாக்யா நீ வீட்டை விட்டு வெளியே போ எழில் என்று சொல்லிவிடுகிறாள். இதை கேட்ட ஈஸ்வரி, நானும் அவனும் பேசிக்கொண்டு இருக்கும்போது நீ எதுக்கு அவனை வீட்டை விட்டு வெளியே போக சொல்ற என்று கேட்கிறார்.

அதேபோல் மொத்த குடும்பமும் பாக்யா சொன்ன வார்த்தையை கேட்டு அதிர்ச்சியில் இருக்கிறது. அதன்பிறகு பாக்யா, நமக்குனு ஒரு குடும்பம் இருக்கிறதே சந்தோஷம் தான். ஆனால் எழிலிடம் இப்போது சந்தோஷம் இல்லை. நிம்மதியும் இல்லை. அவங்கஅவங்க வாழியை பார்த்துக்கொண்டு போவது தான் சரி என்று சொல்ல, ஈஸ்வரி மீண்டும் எல்லாத்துக்கும் காரணம் அமிர்தா தான் என்று சொல்கிறார். இதை கேட்ட எழில் மீண்டும் ஈஸ்வரியிடம் வாக்குவாதம் செய்கிறான்.

அப்போது பாக்யா, நான் சொன்னது உனக்கு புரியலையா உன்னை இந்த வீட்டை விட்டு வெளியே போக சொன்னேன் என்று சொல்ல, ராமமூர்த்தி ஈஸ்வரியை தனியாக அழைத்து சென்று திட்டுகிறார். அந்த அமிர்தா பொண்ணு மேல எதற்கு அபாண்டமாக பழியை போடுற என்று கேட்க, ஏற்கனவே அந்த கணேஷ் வந்து பிரச்சனை செய்தது உங்களுக்கு மறந்து போச்சா, இப்போ இன்னும் குழந்தை இல்லை என்றால் அவன் மீண்டும் வந்து அமிர்தா வேண்டும் என்று கூட்டிக்கிட்டு போய்டுவான். அது நடக்க கூடாதுனு தான் நான் இப்படி பேசுகிறேன் என்று ஈஸ்வரி சொல்கிறார்.

ஏற்கனவே அவன் படம் பண்ண முடியாம போனதுக்கு நான் தான் காரணம் என்று பழியை என் மேல் போட்டுட்டான், இப்போ அவனை வெளியில் அனுப்பி, அந்த பழியையும் பாக்யா என்மேல் போட பார்க்கிறாள் என்று ஈஸ்வரி புலம்புகிறார். அந்த நேரத்தில் எழில் வீட்டை விட் கிளம்ப தயாராக, கோபத்தில் எந்த முடியும் எடுக்க வேண்டாம் என்று அமிர்தா அவனிடம் கேட்கிறாள். அம்மா சொல்லிட்டாங்க, அவங்க சொன்ன சரியாதான் இருக்கும் என்று எழில் அமிர்தாவிடம் சொல்லிவிட்டு, வீட்டை விட்டு கிளம்புகிறான்.

மறுபுறம் செழியன், ஜெனி என அனைவரும் எழிலிடம் வீட்டை விட்டு போக வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாக்யா அவன் எங்காவது சென்று நிம்மதியாக இருக்கட்டும் அவன் இந்த வீட்டை விட்டு செல்வது தான் அவனுக்கு நல்லது என்று சொல்ல, இந்த நேரத்தில் நிலா அங்கு வந்து நாங்க ஊருக்கு போகிறோம். அப்பா ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்காரு என்று சொல்ல, செழியன், இனியா என அனைவரும் அழுகின்றனர். நீங்களும் வரிங்களா என்று நிலா கேட்கிறார். இதை பார்த்து பாக்யா கண்கலங்கி நின்றாலும் எதுவும் பேசாமல் இருக்கிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment