பாக்யா - பழனிச்சாமி திருமணம்? முடிவு செய்த அம்மா... புலம்பும் கோபி : கோபத்தில் இனியா

பழனிச்சாமி அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைஅவங்க மனசுலையும் ஒன்றுமில்லை. தவறாக நீங்க ஏதாவது நினைச்சுக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்கிறார்.

பழனிச்சாமி அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைஅவங்க மனசுலையும் ஒன்றுமில்லை. தவறாக நீங்க ஏதாவது நினைச்சுக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்கிறார்.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடு

சின்னத்திரையின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது பாக்யா பழனிச்சாமி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று பழனிச்சாமியின் அம்மா முடிவு செய்துள்ளார். அதற்கு பழனிச்சாமி தவறாக புரிந்துகாண்டதாக கூறி அம்மாவிடம் புரிய வைக்கிறார்.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில்,கோபி வீட்டுக்கு வந்து போனது குறித்து பழனிச்சாமியின் அம்மா அவரிடம் சொல்கிறார்.  அதற்கு பழனிச்சாமி எல்லாரிடமும் சொல்லி ஒன்னும் ஆகலனு இப்போ உங்ககிட்டயே வந்துட்டாரா என்று கேட்க, உனக்கு பாக்யாவை பிடிச்சிருக்கு தானே நீ பாக்யாவை கல்யாணம் பண்ணிக்கோ என்று பழனிச்சாமியின் அம்மா சொல்கிறார்.

இதை கேட்ட பழனிச்சாமி அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைஅவங்க மனசுலையும் ஒன்றுமில்லை. தவறாக நீங்க ஏதாவது நினைச்சுக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்கிறார். அடுத்து வீட்டில் சந்தோஷமாக இருக்கும் பாக்யா காலேஜ்க்கு போக தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று எழிலை அழைத்துக்கொண்டு இனியாவைவும் கூப்பிடுகிறார். ஆனால் இனியா எனக்கு டாடி வாங்கி தருவார் என்று சொல்ல, அவர் என்ன பண்ணாலும் அவர விடறதா இல்லயா என்று எழில் இனியாவை திட்டுகிறான்.

அடுத்த கோபி பாக்யாவின் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் நடந்ததை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ராதிகா என்னாச்சு என்று கேட்க, ஆபீஸில் ஒரு வேலை ஓடிட்டே இருந்தேன் அந்த இடியட் வேற தலைக்கு மேல இருந்து ஆடிட்டு இருக்கா என்று சொல்ல, கோபமான ராதிகா, நீங்க பாக்யாவ தானே சொல்றீங்க என்று கேட்க கோபி அனைத்தையும் உளறி விடுகிறார். இதை கேட்ட ராதிகா ஒவ்வொரு முறையும் நீங்க அவங்க கிட்ட போய் அவமானப்பட்டுட்டு இருக்கிறீர்களா? என்று திட்டி சண்டை போடுகிறார்.

Advertisment
Advertisements

அடுத்த நாள் காலையில் விடிந்ததும் இனியா காலேஜுக்கு கிளம்பியதும் பாக்யா பூஜை செய்து முடிக்கிறார். அனைவரும் இனியாவிற்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கின்றனர். அதன்பிறகு இனியாவை கலேஜில் ட்ராப் செய்வது யார் என்பது குறித்து சண் வருகிறது. பாக்யா நான் ஆட்டோவில் கொண்டு போய் விடுகிறேன் என்று சொல்ல எழில் நான் கூட்டிக்கிட்டு போகிறேன் என்று சொல்ல, செழியன் நான் கூட்டிட்டு போறிறேன் என்று சொல்ல, மூவரையும் சமாளித்து வெளியில் வந்து கேட்டை திறக்கும்போது கோபி அங்கே காத்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: