Advertisment

மீண்டும் கோபியை தேடி வந்த ராதிகா; பாக்யா கொடுத்த ஷாக்

ஈஸ்வரி கோபியிடம் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு அதிர்ச்சியாகும் ராதிகா ஈஸ்வரியிடம் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது.

author-image
WebDesk
May 27, 2023 12:09 IST
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், இன்றைய எபிசோடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இன்றைய எபிசோட்டில், இனியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா வந்துட்டாங்களா என்று கேட்க, அவ இனிமே வரமாட்டா என்று ஈஸ்வரி சொல்கிறார். நான் வர மாட்டேனு ராதிகா உன்கிட்ட சொன்னாளா என்று ராமமூர்த்தி கேட்க, அப்போது கோபி அங்கே வருகிறார். அவரிடம் ஈஸ்வரி நலம் விசாரிக்கிறாள்.

தொடர்ந்து பாக்யாவிடம் கோபிக்கு காபி கேட்கிறார் ஈஸ்வரி. ஆனால் அம்மா கோவிலுக்கு போயிருப்பதாக இனியா சொல்ல தனது மகனுக்காக ஈஸ்வரியே காபி போடுகிறார். அந்த காபியை குடித்துக்கொண்டிருக்கும் கோபியிடம் இனி ராதிகா உனக்கு வேண்டாம். அவளை விவாகரத்து பண்ணிவிடு என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ராதிகா அங்கே என்ட்ரி ஆகியார்.

ஈஸ்வரி கோபியிடம் பேசிக்கொண்டிருப்பதை கேட்டு அதிர்ச்சியாகும் ராதிகா ஈஸ்வரியிடம் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. அப்போது ஈஸ்வரி உன்னாலதான் என் பையன் இப்படி ஆகிட்டான் நீ வந்த பிறகுதான் அவன் வாழ்க்கை இப்படி நாசமா போச்சு என்று சொல்ல அத்தனையும் கேட்டு கோபி அமைதியாக இருப்பதால் ராதிகாவுக்கு கோபம் அதிகமாகிறது.

ஈஸ்வரியும் உன்னை எப்படியும் நான் இந்த வீட்டை விட்டு அனுப்பி வைத்து விடுவேன் என்று சவால் விடுகிறார். இதனிடையே கோபி ராதிகாவை வா உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறி ரூமுக்கு கூட்டி போய்விட அங்கே கோபிக்கும் ராதிகாவுக்கும் சண்டை முற்றுகிறது. கோவிலுக்கு போன பாக்யா வீட்டுக்கு வர ராதிகா வீட்டுக்கு வந்த விஷயத்தை செல்வி பாக்யாவிடம் சொல்கிறாள்.

ஆனால் பாக்கியா எதையும் பெரிதாக எடுத்துக் கண்டுகொள்ளாத நிலையில், அவங்க எங்க இருந்தாலும் எனக்கு பிரச்னை கிடையாது. எனக்குன்னு ஒரு தனித்துவமும், அடையாளமும் கிடைச்சிருக்கு அதை எக்காரணம் கொண்டு நான் இழக்க விரும்பல என்று சொல்கிறார். மேலே கோபியிடம் ராதிகா தனது சண்டையை தொடர கோபி எனக்கு தலை வலிக்குது கொஞ்சம் அமைதியா இரு என்று சொல்கிறான். ஆனாலும் ராதிகா பல கேள்விகளை கேட்டு நச்சரித்துக்கொண்டிருக்கிறாள். இதனால் கடுப்பாகும்கோபி ரூமை விட்டு வெளியே வருகிறார்.

அங்கு ராமமூர்த்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். கோபி காபிக்காக ஏங்குகிறார். ஆனால் காபி கேட்ட தரமாட்டாங்க என்று தெரிந்து செல்வியிடம் தைலம் கேட்கிறான. அப்போது சாப்பிட்டு முடித்த ராமமூர்த்திக்கு பாக்யா காபி கொடுக்க அவர் குடித்துக்கொண்டிருப்பதை பார்த்த கோபி அடக்க முடியாமல் எனக்கு ஒரு காபி போட்டு கொடு ப்ளீஸ் என்று பாக்யாவிடம் மன்றாடுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Serial Actress #Tamil Cinema #Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment