Advertisment

ஈஸ்வரியை மாட்டிவிட்ட கோபி: ராமமூர்த்தி எடுத்த விபரீத முடிவு; பாக்கியலட்சுமி சீரியலில் இன்று!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Baakiyalsk Radhika Eas

கமலா கொடுத்த பொய் புகாரின் காரணமாக சிறையில் இருக்கும் ஈஸ்வரி எப்போது வெளியே வருவார் என்ற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் பாககியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், பாக்யாவை விசாரிக்கும் வக்கீல், இவங்களுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு அதனால் தான் அவர் ராதிகாவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் அவரது குழந்தையையும் கொலை செய்துள்ளார் என்று சொல்ல, அதற்கு பாக்யா இல்லை அத்தை அப்படி செய்ய மாட்டார் என்று சொன்னாலும் பாக்யாவின் பேச்சை கேட்க நீதிபதி மறுத்துவிடுகிறார்.

அடுத்து வக்கீல் கோபியிடம் விசாரிக்க, சம்பவம் நடந்தபோது நான் வீட்டில் இல்லை அதனால் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூற, ஈஸ்வரி இந்த குழந்தை வேண்டாம் அழித்துவிடு என்று சொன்னாரா என்று கேட்க, ஆமாம் என்று சொல்லும் கோபி, எனக்கு வயசாகிடுச்சி அதனால் இந்த குழந்தை வேண்டாம் என்று என் மேல் உள்ள அக்கறையில் அப்படி சொன்னார் என்று கூறியுள்ளார். இதை கேட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து ஈஸ்வரியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, வெளியே வரும் கமலா, ராதிகா ஆகிய இருவரிடமும், நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அத்தையை பழிவாங்கிவிட்டீர்கள் என்று சொல்ல, அப்போது அங்கு வரும் எழில், இவங்ககிட்ட பேசி ஒன்னும் ஆக போறது கிடையாது. இதையும் அவர்கள் பெரிய பிரச்சனையாக மாற்றுவார்கள் வாமா போகலாம் என்று பாக்யாவை அழைத்து செல்கிறான்.

அதன்பிறகு ஈஸ்வரியை பார்க்க அனைவரும் காத்துக்கொண்டிருக்க, போலீஸ் யாராவது ஒருவரைத்தான் அனுப்ப முடியும் என்று சொல்லிவிடுகிறார். அதன்படி பாக்யா உள்ளே செல்ல, ஈஸ்வரி அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு, நான் இனி காலம் முழுக்க இங்கேயே தான் இருக்கனுமா? என்று கேட்க, அழ, நான் உங்களை எப்படியாவது வெளியில் எடுத்துவிடுகிறேன் என்று பாக்யா உத்தரவாதம் அளிக்கிறாள். அதன்பிறகு அனைவரும் வீட்டுக்கு செல்கின்றனர்.

வீட்டுக்கு வந்ததும், ஈஸ்வரி இல்லாட்டி நானும் இருக்க மாட்டேன். எதாவது பண்ணிக்குவேன் என்று ராமமூர்த்தி சொல்கிறார். இவருக்கு ஆறுதல் சொல்லும் எழில், கோபி வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தால் பாட்டிக்கு ஜாமீன் கிடைத்திருக்கும். எல்லாத்தையும் கெடுத்துட்டார் என்று சொல்ல, அதை விடு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம் என்று சொல்ல, அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment