கமலா, ராதிகாவுக்கு ஷாக் கொடுத்த கோபி: ஈஸ்வரியை காப்பாற்ற பாக்யாவின் ப்ளான் என்ன?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Eawsawe

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியதில் இருந்து அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்றை எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், கமலா தனது மகனுடன் போனில் பேசிக்கொண்டிருக்க, அப்போது அங்கு கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. கமலா போய் கதவை திறக்க, போதையில் நிற்கும் கோபி, நீங்க இனிமேல் இந்த வீட்டில் இருக்க கூடாது. எங்க அம்மாவை எப்படி வெளியில் எடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். நான் இனிமேல் உங்கள் முகத்தில் கூட முழிக்க மாட்டேன் என்று சொல்ல, ஏன் அந்த வீட்டுக்கு போக போறீங்களா அதுதான் உங்க ப்ளானா என்று கமலா கேட்கிறாள்.

அதை கேட்ட கோபி, இல்லை, நான் ஏன் அங்கே போக வேண்டும். நீங்கள் ரெண்டு பேரும் இந்த வீட்டை விட்டு வெளியில் போங்க என்று சொல்ல, நாங்க ஏன் போகனும் இது உங்க வீடா என்று கமலா கேட்க, ரூல்ஸ் பேச எனக்கு தெம்பு இல்லை மரியாதையாக வெளியில போங்க என்று சொல்ல, போக முடியாது என்று கமலா சொல்லிவிடுகிறாள். அதன்பிறகு வீட்டில் புலம்பிக்கொண்டிருக்கும் ராமமூர்த்தி கோர்ட்டுக்கு வரவில்லை என்று சொல்ல, பாக்யா பிடிவாதமாக நீங்கள் கோர்ட்டுக்கு வர வேண்டும் என்று சொல்லி கிளம்பி விடுகிறாள்.

மறுபக்கம், நானும் கோர்ட்டுக்கு வரவில்லை என்று ராதிகா சொல்ல, பழைய கதையெல்லாம் சொல்ல, அவளை அழைத்து வருகிறாள் கமலா. அதே சமயம் எனக்கு ரெஸ்டாரண்டில் வேலை இருக்கிறது முடித்துவிட்டு வருகிறேன் என்று பாக்யா சொல்ல, எழில், ராமமூர்த்தி செழியன் ஆகியோ கிளம்பி செல்கின்றனர். அங்கு ராதிகா கமலா வருவதை பார்த்த ராமமூர்த்தி புலம்பிக்கொண்டே கோபப்படுகிறார். அப்போது அங்கு வரும் கோபி அப்பாவிடம பேச முயற்ச்சிக்க, என்ட பேசுனா உன்ன கொன்டுவேன்டா என்று ராமமூர்த்தி திட்டி அனுப்பிவிடுகிறார்.

Advertisment
Advertisements

அதன்பிறகு கோர்ட்டில் இருந்து அழைப்பு வர முதலில் கமலா ராதிகா இருவரும் செல்ல, பின்னால் ராமமூர்த்தி எழில் செழியன் ஆகியோர் செல்கின்றனர். அப்போது கமலா எங்க இந்த பாக்யாவை காணோம். இங்க இருந்தா குறுக்கும் நெடுக்குமாக அலைந்துகொண்டிருப்பாளே என்று கேட்டுக்கொண்டிருக்கிறாள். கடைசிவரை பாக்யா வராத நிலையில், பாக்யாவை தேடி செல்வி கோர்ட்டுக்கு வந்துவிடுகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: