Advertisment

பிக்பாஸ் நடிகை என்ட்ரி: பாக்கியலட்சுமி சீரியல் கதை அடுத்து இப்படித்தான் போகுமோ!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் புது நடிகை ஒருவர் என்ட்ரி ஆக உள்ளார்.

author-image
WebDesk
New Update
Baakiya Laks

பாக்கியலட்சுமி

செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரலமான நடிகை அனிதா சம்பத் தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க உள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கோபி, ராதிகா, பாக்யா ஆகிய 3 கேரக்டர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்னைகள் மற்றும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் கோபியின் 2-வது மனைவி ராதிகாவின் கர்ப்பம் கலைந்தற்கு ஈஸ்வரிதான் காரணம் என்று ராதிகாவின் அம்மா கேஸ் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் இருந்து ஈஸ்வரியை பாக்யா எப்படி காப்பாற்றுவார் என்று அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருந்த நிலையில், ராதிகாவின் மகள் மயூ ஈஸ்வரிக்கு ஆதரவாக சாட்டி சொன்னதை தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி விடுதலையாகி வெளியி வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கும் நிலையில், ஈஸ்வரி மீது பொய் புகார் கொடுத்த கமலாவுக்கு அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல், ஈஸ்வரியை ஜெயிலில் அடைக்க, பாடுபட்ட கமலா மற்றும் ராதிகாவிடம் கோபி எப்படி நடந்துகொள்வார்,? தனக்கு எதிராக சாட்சி சொன்ன மயூ மீது ஈஸ்வரி என்ன செய்ய போகிறார் என்பது குறித்து அடுத்து வரும எபிசோடுகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது புதிதாக இந்த சீரியலில், பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் என்ட்ரி ஆக உள்ளார். செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அனிதா சம்பத் தற்போது படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

தற்போது ஈஸ்வரி பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதால் அடுத்து கோபி – பாக்யா இடையே சமையல் போட்டி நடக்க உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் கேரக்டரில் அனிதா சம்பத் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேபோல் இனி காமெடி கோபியை பார்க்க முடியாது. அடுத்து வரும் பல எபிசோடுகளில் என் சீரியஸ் மற்றும் அழுகைகான காட்சிகளை தான் பார்க்க முடியும்.

இடையில் எதாவது மாற்றம் வந்தாலும் வரலாம் என்று கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் கூறியிருந்தார்.  நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள இந்த பதிவு மற்றும் அனிதா சம்பத்தின் வருகை என இரண்டுமே சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment