Advertisment

மயூவுக்கு செக் வைக்கும் கமலா: கண்ணீருடன் வந்த கோபி; ஈஸ்வரி என்ன செய்ய போகிறார்?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Kamala Mayura

கமலா - மயூரா

பாக்கியலட்சுமி சீரியல் நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஈஸ்வரி விடுதலை ஆகிவிட்டதால் அடுத்து ராதிகா கமலா என்ன செய்வார்கள்? கோபி அம்மாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில் ராதிகா சோகமாக உட்கார்ந்திருக்க, அவரிடம் பயந்தபடியே கமலா பேச வருகிறார். இதை பார்த்த ராதிகா, கோபத்தில் என்னை பொய்க்காரியா ஆக்கிட்டீல்ல, நீ சொன்ன வார்த்தையை நம்பி கோர்ட் படி ஏறி இப்போ அசிங்கப்பட்டு வந்து நிற்கிறேன். இனிமேல நான் சொல்வதை யார் நம்புவார் என்று கேட்க, நான் மட்டுமா சொன்னேன், நீயூம் தான் அந்த பொம்பளை தள்ளிவிட்டது என்று சொன்னே என்று கமலா சொல்கிறாள்.

இதை கேட்டு மேலும் கோபப்படும் ராதிகா, நான் சொல்லல, என்னை நீ அப்படி சொல்ல வச்ச, என்று சொல்ல, கமலா அப்படியே பேச்சை மயூ பக்கம் திருப்பிவிட, ராதிகா மயூவிடம் கேள்வி கேட்கிறாள். யாராவது அம்மா பாட்டிக்கு எதிராக சாட்சி சொல்வாங்களா? அந்த பாக்யா உன்ன அப்படி சொல்ல சொன்னாளா என்று கமலா கேட்க, நான் ஒன்னும் பொய் சொல்லல உண்மையை தான் சொன்னேன் என்று மயூ அதிர்ச்சி கொடுக்கிறாள்.

இதை கேட்ட ராதிகா, உனக்கு சொல்றதுக்கு நேரமே கிடைக்கலையா? வீட்ல யார்கிட்டையாவது சொல்லியிருக்கலாமே என்று கேட்டுவிட்டு ராதிகா எழுந்து போய்விடுகிறாள். மறுபக்கம், குடித்துவிட்டு நண்பன் செந்திலிடம் புலம்பிக்கொண்டிருக்கும் கோபி, என் அம்மாவுக்கு நான் துரோகம் செய்விட்டேன். யார் என்ன சொன்னாலும் நான் என் அம்மாவை நம்பியிருக்கனும். ஆனா நான் அவங்களை நம்பல. அவங்க என்கிட்ட ராதிகாவை தள்ளிவிடனு சொன்னாங்க, ஆனா நான் நம்பவே இல்லை.

நான் இந்த உலகத்தில் பிறக்காமல் இருந்திருந்தால் என் அம்மாவுக்கு இவ்வளவு பெரிய அவமானம் வந்திருக்காது. என் அம்மா மட்டும் என்கிட்ட பேசலனா நான் சொத்துபோய்டுவேன் என்று சொல்கிறான். அடுத்த கமலா மயூவை திட்டிக்கொண்டிருக்க, மயூ ராதிகாவடம் சாரி சொல்ல, அப்போது நீ எப்படி பாக்யாகிட்ட நடந்த விஷயத்தை சொன்ன என்று ராதிகா கேட்க, நான் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வ்நதபோது யாரும் இல்லை. அப்போது பார்க் போனபோது அங்கு பாக்யா ஆண்டி வந்தாங்க. அப்போ சும்மாதான் பேசிட்கிட்டு இருந்தோம். அப்போ தான் சொன்னேன் என்று சொல்ல, இடையில் கமலா பாக்யா மீது பழி போடுவது போன்று பேசி திசை திருப்புகிறாள்.

அதே சமயம் மயூ உண்மையாவே ஈஸ்வரி பாட்டி அம்மாவை தள்ளி விடல, அவங்க அம்மாவை பிடிக்கதான் வந்தாங்க. அதுக்குள்ள அம்மா கீழே விழுந்துட்டாங்க, அப்போவும் பாட்டி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணத்தான் வந்தாங்க என்று மயூ சொல்ல, இதை ஏன் முன்கூட்டியே என்ட சொல்லல, சொல்லியிருந்தா இவ்வளவு பிரச்சனை நட்திருககாதுல்ல, என்று சொல்ல, இதை சொல்ல பயமா இருந்துச்சு அதான் சொல்ல, பாக்யா ஆண்டி அழுததை பார்க்க பாவமாக இருந்துது. அதனால் தான் உண்மையை சொன்னேன்.

இதை கேட்ட ராதிகா, அப்போ நான் அழுததது உனக்கு பாவமாக இல்லையா என்று கேட்கிறாள். அடுத்து பாக்யா வீட்டில் ஈஸ்வரி விடுதலையை கொண்டாட பிரியாணி சிக்கன் 65 செய்ய அனைவரும் சாப்பிட அமரும்போது, கண்ணீருடன் கோபி வாசலில் வந்து நிற்க அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment