/indian-express-tamil/media/media_files/xjDSUL89tgbdD4kLq5Ln.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
கொலை வழக்கில் இருந்து தப்பித்த ஈஸ்வரி, தனது மகனை வெறுத்து தலை மூழ்கியதால், பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்யாவுக்கும் கோபிக்கும் இடையே நடந்த சமையல் மோதலின் 2-வது ராவுண்டில் கோபி பாக்யாவை வென்றுள்ளார். இதனால் மீதமுள்ள 2 ரவுண்டில் ஒருவர் மட்டுமே பங்கேற்க முடியும் என்று கூறுகிறார்கள். மறுபக்கம் நண்பர்களுடன் பப்புக்கு போயிருக்கும் இனியா, நண்பர்கள் அனைவரும் பீர் குடிப்பதால் பயத்தில் இருக்கிறாள்.
அப்போது இனியாவின் தோழி பிரியா இனியாவை டான்ஸ் ஆட அழைக்க, அந்த நேரத்தில் பாக்யா போன் செய்கிறார். இனியா போன் எடுக்காததால், பாக்யா உடனே செழியனுக்கு போன் செய்து, இங்குதான் இருக்கிறேன் நான் போய் பார்க்கிறேன் என்று செழியன் சொல்கிறான். அதன்பிறகு செழியன் போட்டி பற்றி விசாரிக்க, அங்கு நடந்ததை சொல்கிறாள். அந்த நேரத்தில் பப்பில் சீனியர்கள் இனியாவின் நம்பரை கேட்கின்றனர்.
அவர்கள் கேட்க, நம்பரை கொடுக்க, இனியாவின் தோழி மறுக்க, அங்கு மோதல் உருவாகிறது. இந்த பக்கம் செழியனிடம் பேசிவிட்டு போனை வைக்கும் பாக்யாவிடம் ஈஸ்வரி அங்கு பாரு அவன் இன்னொருவனை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான் என்று சொல்லி நடுவர்களிடம் சண்டை போகிறாள். அதற்கு கோபி நான் நடுவர்களிடம் கேட்டு பர்மிஷன் வாங்கிக்கொண்டு தான் அழைத்து வந்திருக்கிறேன் என்று சொல்கிறான்.
நீங்கள் வேண்டுமானாலும் ஆளை மாற்றிக்கொள்ளலாம் என்று கோபி சொல்ல, 6-வது ராவுண்ட் போட்டி முடிகிறது. இதில் கோபியின் டீம் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சமைத்திருப்பதாக பாராட்டுக்களை பெறுகின்றனர். அதே சமயம் பாக்யாவின் சமையல் மண் மனம் மாறாமல் இருக்கிறது என்றாலும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் கோபியிடம் தோல்வியை சந்திக்கிறாள் பாக்யா. இதை கேட்டு, ஈஸ்வரி பாக்யா என எல்லோரும் அதிர்ச்சி அடைய அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.