கிடைத்த கேப்பில் ஹீரோயின் ஆன ராதிகா: வில்லியாக முத்திரை குத்தப்பட்ட பாக்யா; இனியா செய்த சூழ்ச்சியோ!

ராதிகா பொய் கம்ளைண்ட் கொடுத்தது தவறா? அல்லது உண்மையை நிரூபிக்க, மயூவை கோர்ட்டுக்கு அழைத்து வந்த பாக்யா செய்தது தவறா?

ராதிகா பொய் கம்ளைண்ட் கொடுத்தது தவறா? அல்லது உண்மையை நிரூபிக்க, மயூவை கோர்ட்டுக்கு அழைத்து வந்த பாக்யா செய்தது தவறா?

author-image
WebDesk
New Update
Radhika Iniya and Cher

பாக்கியலட்சுமி சீரியல்

ஈஸ்வரியை பிரச்சனையில் இருந்து மீட்ட பாக்யா அடுத்து தனது மகள், இனியாவை எப்படி மீட்பார் என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது இனியாவை ராதிகா காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல், மயூவை கோர்ட் வரை அழைத்து சென்றது தவறு என்று புரிய வைத்துள்ளார்.

Advertisment

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் பப் ஓனரிடம் சென்று எங்களை விட்டுவிடுங்கள் என்று சொல்ல, போலீஸ் வரட்டும் பாத்துக்கொள்வோம் என்று சொல்ல, ஆண்கள் அனைவரும் நாங்கள் தான் குடித்திருக்கிறோம். அவர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்கின்றனர். இதை கேட்ட ந்த ஓனரும், சரி என்று முடிவு செய்து பெண்களை வெளியில் அனுப்ப, அதற்குள் போலீஸ் வந்துவிடுகிறது.

போலீஸ் வந்தவுடன் அனைவரின் ஐடி கார்டு வாங்கி பார்க்கும்போது அனைவருக்கும் 19 வயது தான் ஆகிறது என்று தெரியவர, இந்த வயசுல நீங்க எப்படி பப்புக்கு வந்தீங்க, நீங்க எப்படி இவங்களை உள்ளே விட்டீங்க என்று ஓனரிடம் கேட்கின்றனர். இங்க வந்தது உங்க வீட்டுக்கு தெரியுமா? படிச்சு பெரிய ஆளா வருவதை விட்டுவிட்டு, பப் பார்க்குனு சுத்திட்டு இருக்கீங்க என்று சொல்லி உங்கள மாதிரி ஆட்களால் தான் ஆக்ஸிடன்ட் அதிகமாக நடக்குது உங்களை ஜெயிலில் அடைத்தால் தான் புத்தி வரும் என்று போலீஸ் திட்டுகின்றனர்.

செழியன் அந்த நேரத்தில் இனியாவுக்கு போன் செய்ய, என் அண்ணன் போன் செய்கிறார் பேசிக்கட்டுமா என்று போலீசிடம் கேட்க, அதெல்லாம் முடியாது என்று போலீஸ் சொல்கின்றனர். எல்லோரையும் ஜீப்பில் ஏற்ற போகும்போது, அங்கு தனது தோழிகளுடன் வரும் ராதிகா இதை பார்த்துவிடுகிறாள். பிறகு போலீஸிடம் என்ன ஆச்சு என்ன பிரச்சனை என்று விசாரிக்க போக, இனியா அனைத்துவிஷயத்தையும் சொல்லி காப்பாற்ற சொல்கிறாள். அவளுடன் சேர்ந்து அவளது தோழிகளும் காப்பற்ற சொல்கின்றனர். 

Advertisment
Advertisements

இவங்களை ஸ்டேஷனுக்கு கூட்டி போனால் அவர்கள் வாழ்க்கையே போய்விடும். விட்டுடுங்க என்று சொன்ன, ராதிகாவின் பேச்சை கேட்டு யோசிக்கும், போலீஸ், இதெல்லாம் இவர்கள் முன்பே யோசித்திருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இதன்பிறகு ராதிகா தனது அண்ணன் மூலமாக டிஎஸ்.பியிடம் பேசி, இன்ஸ்பெக்டரிடம் பேசி இனியாவை வெளியில் விட சொல்கின்றனர். அப்போது உனக்கு அறிவே இல்லையா என்று இனியாவை திட்ட, அப்போது செழியன் போன் செய்ய போனை எடுக்கும் ராதிகா இந்த லெக்கேஷனுக்கு வா என்று லெக்கேஷனை ஷேர் செய்கிறாள்.

இந்த லெக்கேஷன் பப் முகவரி என்று தெரிந்துகொண்ட செழியன் அங்கே செல்ல, இங்கு ராதிகாவிடம் சத்தம்போட ராதிகாவே நான்தான் அவளை காப்பாற்றினேன் என்று சொல்ல, நான் மட்டும் இல்லனா இவ ஸ்டேஷன் போயிருப்பா குடும்பத்துடன் ஸ்டேஷன் போய் அசிங்கப்பட்டிருப்பீங்க. பப்புக்கு வந்து குடிச்சிட்டு கும்மாளம் போட்ட அதான் போலீஸ் புடிச்சிட்டு போய்டுச்சி என்று சொல்ல, பப்புக்கு வந்தது உண்மைதான் ஆனா குடிக்கல என்று இனியா சொல்கிறாள்.

அதன்பிறகு இனியாவை செழியன் அழைத்து செல்ல போகும்போது, விடாத ராதிகா உங்க அம்மாவை இங்கு வர சொல்லு என்று சொல்கிறாள். மறுபக்கம், இறுதிச்சுற்றில் கோபியிடம் சமையல் போட்டியில் மோதிய பாக்யா, நடுவரின் தீர்ப்புக்காக காத்திருக்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இந்த சீரியலில், இப்போது வரும் காட்சியை பார்த்தால் உண்மையில் பாக்யா ராதிகா இருவரில் யார் வில்லி யார் நல்லவர் என்றே தெரியவில்லை.

தனது மாமியார் மீது பழி சுமத்திய ராதிகா பெரிய தப்பு செய்திருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டு, உண்மையை சொல்ல கோர்ட்டுக்கு மயூசை அழைத்து வந்தது பாக்யாவின் பெரிய தவறு என்பது போல் கதையை எடுத்துச்சென்று, ராதிகா தவறு செய்யவில்லை பாக்யாதான் ராதிகாவுக்கு துரோகம் செய்தவிட்டார் என்றபடி மாற்றி, இப்போது பாக்யா தவறு செய்தாலும், நான் நியாயமாக நடந்துகொள்வேன் என்று ராதிகா கேரக்டரை காட்டுகிறார்கள். இருவரில் யார் செய்தது தவறு என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

திரைப்படங்களில் வில்லி அல்லது வில்லன் எவ்வளவு தான் தவறு செய்தால் அவர்களின் குடும்பத்துடன் ஹீரோ தன்மையாக நடந்துகொள்வார். அதுபோலத்தான் பாக்யா தனது மகளை கோர்ட்டுக்கு அழைத்து சென்று தவறு செய்திருந்தாலும், அவரது மகளுக்கு நான் கெடுதல் செய்ய மாட்டேன் என்பது போல் ராதிகா கிடைத்த கேப்பில் பாக்கியலட்சுமி சீரியலின் ஹீரோயினாக மாறிவிட்டார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: