/indian-express-tamil/media/media_files/cCeFeAl0Wz95h0MmcYMl.jpg)
ராதிகா - பாக்யா
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா பர்த்டே பார்டிக்கு செல்வதாக கூறிவிட்டு பப்புக்கு சென்றதை தொடர்ந்து போலீஸ் கைது செய்த நிலையில், ராதிகா அவரை காப்பாற்றினார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஈஸ்வரி மீது பொய் புகார் கொடுத்து பெரிய தப்பு செய்த ராதிகா, அந்த வழக்கில் உண்மையை சொல்ல பாக்யா தனது மகள் மயூவை கூட்டிக்கொண்டு வந்தது தான் பெரிய தவறு என்பது போல் பாக்யாவை பழி தீர்க்க காத்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில், பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட சமையல் போட்டியில், கோபி – பாக்யா இருவரும் பங்கேற்றிருந்த நிலையில், இனியா பர்த்டே பார்டிக்கு செல்வதாக பாக்யாவிடம் கூறிவிட்டு சென்றார்.
சமையல் போட்டியில் தொடக்கத்தில் கோபியிடம் தோல்வியை சந்தித்த பாக்யா, அடுத்து வெற்றி பெற்ற நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோபியிடம் மோதலை சந்தித்தார். இதனிடையே பர்த்டே பார்ட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு நண்பர்களுடன் பப்புக்கு சென்ற இனியா, அங்கு நடந்த பிரச்சனையில் போலீசில் சிக்கிக்கொண்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்த பக்கமாக வந்த பாக்யா தனது செல்வாக்கை பயன்படுத்தி இனியாவை காப்பாற்றினார்.
அதன்பிறகு செழியன் இனியாவை கூப்பிட்டு போக வர, பாக்யா இங்கு வந்தால் தான் இனியாவை விடுவேன் என்று சொல்ல, சமையல் போட்டியில் இருந்து பாக்யா பாதியில் வருகிறார். மீதியை செல்வி பார்த்துக்கொண்ட நிலையில், இனியாவை பார்க்க வந்த பாக்யாவிடம், மயூவை கோர்ட்டுக்கு கூட்டி வந்ததை சுட்டிக்காட்டி, இக்கட்டான சூழ்நிலையில், உங்கள் மகள் இனியாவை காப்பாற்றி இருக்கிறேன் என்று கூறுகிறாள். இதனை ஏற்றுக்கொண்ட பாக்யா நன்றி தெரிவித்துவிட்டு கிளம்புகிறாள்.
வழியில் செல்வி போன் செய்து, பேச, யாருமே கொடுக்க முடியாத சிறப்பு பரிசை இனியா கொடுத்துவிட்டாள். சமையல் போட்டியை நீயே பார்த்துக்கொள் என்று சொல்ல, அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.