/indian-express-tamil/media/media_files/xjDSUL89tgbdD4kLq5Ln.jpg)
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், பாக்யா இனியா திட்ட, இனியா, சாரிமா ப்ரண்ட் கம்பெல் பண்ணாங்க அதனாலதான் போனேன் என்று சொல்ல, அவங்க சொன்ன உனக்கு அறிவு எங்க போச்சு? நம்ம நல்ல நேரம் எதுவும் ஆகல. ராதிகா மட்டும் அங்க வரலனா, நீ ஜெயில்ல இருந்திருப்ப. நாளைக்கு காலெஜ்ஜில் டிசி கொடுத்திரப்பாங்க இதெல்லாம் உனக்கு தேவையா என்று கேட்டு பாக்யா திட்டுகிறாள்.
நீ எங்க போனாலும் உன் கூடவே வந்து நீ எங்க போறனு பார்த்துக்கொண்டே இருக்கனுமா? போக கூடாதுனு சொன்ன நாங்க பழைய ஆளா தெரிவோம். நம்பி அனுப்பி வச்சா இந்த மாதிரி பிரச்சனையை கொண்டு வருவீங்க.நாங்கள் என்னதான் செய்ய வேண்டும் என்று அழுது புலம்புகிறாள். அப்போது இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் காரணம் செழியன் தான் என்று ஈஸ்வரி சொல்கிறாள். அவன் அப்போவே இனியா எங்க போனானு தெரியலைனு சொல்லியிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது என்று சொல்கிறாள்.
இதை கேட்ட எழில் நீங்கள் பயப்பட கூடாது என்பதால் இதை சொல்லியிருக்க மாட்டான் என்று சொல்ல, ஈஸ்வரி உள்ளே சென்றுவிடுகிறாள். மறுபக்கம் இனியாவுக்கு என்ன ஆச்சு என்று கோபி ராதிகாவிடம் விசாரிக்க, ராதிகா எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறாள். உடனே பாக்யா வீட்டுக்கு வரும் கோபி, இனியாவுக்கு போன் செய்ய, சுவிட்ச் ஆப் என்று வருகிறது. அடுத்து செழியனுக்கு போன் செய்ய அவன் எடுத்து பேசுகிறான்.
அதன்பிறகு செழியன் வந்து கோபியிடம் நடந்ததை சொல்லிவிட்டு, ராதிகாதான் காப்பாற்றினார் என்று சொல்ல, கோபி ராதிகாவை நினைத்து பெருமைப்படுகிறான். அதன்பிறகு ராதிகாவுக்கு நன்றி சொல்ல, கோபி ரூம் கதவை தட்ட, ராதிகா அமைதியாக திறக்காமல் இருக்கிறாள். மறுபக்கம் பாக்யா ரூம்க்கு வர இனியா தூங்குவது போல் இருக்கிறாள். அதன்பிறகு எழுந்து பாக்யாவிடம் இனியா மன்னிப்பு கேட்க, இன்று நண்பர்கள் கூப்பிட்டதால் போனேன் என்று சொல்ற, அவர்கள் விஷயம் கொடுத்தால் குடிப்பியா என்று கேட்க அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.