Advertisment

கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த கமலா: ஈஸ்வரியை காப்பாற்ற பாக்யா என்ன செய்வார்?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiya Laks

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மா ஈஸ்வரி மீது புகார் கொடுக்க, போலீஸ் ஈஸ்வரியை கைது செய்ய நிலையில், ராமமூர்த்தி கோபியை அடித்துவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஈஸ்வரி கைது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கோபி சொல்ல, உனக்கு தெரியாமல் எப்படிடா இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கும்? உன் வீட்ல இருந்து தானே கம்ளைண்ட் போயிருக்கு என்றும், என்னை நம்பித்தானே வந்தா, இன்னும் எத்தனை முறை எங்களை சித்திரவதை செய்வ என்று ராமமூர்த்தி கோபியிடம் கேட்கிறார்.

மேலும் அவளை வீட்டுக்கு அனுப்பிட்டு இப்போ ஜெயிலுக்கு அனுப்பிட்டியே என்று சொல்ல, உங்களை பார்த்தாலே பிடிக்கல டாடி என்று இனியா சொல்ல, உன் மேல சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது மா என்று கோபி சத்தியம் செய்ய வர, எழில் கோபியை தடுத்து நிறுத்தி அடிக்க போக, இனிமேல் உங்க நாடகம் எங்ககிட்ட எடுபடாது என்று சொல்கிறான். அதன்பிறகு பாக்யா எல்லோரையும் சமாதானப்படுத்தி வீட்டுக்குள் அழைத்து செல்கிறாள்.

கோபி அடி வாங்குன இடத்தில் நிற்கும்போது அவனை எல்லோரும் திட்டுகின்றனர். இந்த கோபத்தில் வீட்டுக்கு வந்து வேகமாக கோபி கதவை தட்ட, பயந்துகொண்டே திறக்கும் ராதிகாவிடம், எதற்காக வெளியில் வந்து அங்க பார்த்துக்கொண்டே இருந்த, எங்க அம்மாவை கைது பண்ணி கூட்டிட்டு போறாங்களா இல்லையானு பாக்க வந்தியா? நீ இவ்வளவு பெரிய வன்மம் பிடிச்சவளா? எங்க அம்மாவை வீட்டை விட்டு அனுப்பிய பிறகும் உன் கோபம் அடங்கலையா என்று கேட்கிறான்.

இதற்கு ராதிகா எதுவும் பதில் சொல்லாமல் இருக்க, அங்கு வரும் கமலா, இப்போ எதுக்காக ராதிகாவை திட்டிரீங்க, ராதிகாவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நான் தான் உங்க அம்மா மேல கம்ளைண்ட் கொடுத்தேன் என்று சொல்ல, கோபி அதிர்ச்சியாகிறான். மேலும் உங்க அம்மா என் பொண்ணோட குழந்தையை கொண்ணுட்டாங்க என்று சொல்ல, கோபி மாமியார் என்று கூட பார்க்காமல் கண்டபடி திட்ட, எங்க அம்மாதான் தள்ளிவிட்டாங்கனு நீங்க பார்த்தீங்களா என்று கேட்கிறான்.

நீங்க இப்படியே சொல்லிக்கிட்டே இருக்கீங்க, அன்னைக்கு எங்க அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னதுக்கு காரணமே ராதிகாவின் மன நிம்மதிக்காகத்தான். அதுவே தப்புனு இன்னைக்கு வரைக்கும் நான் ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். அவங்க உடம்பு சரியில்லாதவங்கனு தெரிஞ்சும் நீ கம்ளைண்ட் கொடுத்திருக்க, எது என்னோட குழந்தை. எனக்கும் என் மனைவிக்கும் உள்ள விஷயம். அதுல தலையிட நீங்க யாரு என்று கோபி திட்ட அப்போது மயூ வர கோபி அமைதியாகிறான்.

அதன்பிறகு நான் போலீஸ் ஸ்டேஷன் போகிறேன் எங்க அம்மாவுக்கு எதாவது ஆச்சினா உங்களை சும்மா விட மாட்டேன் என்று சொல்லிவிட்டு போக மயூ வந்து என்னாச்சு என்று கேட்கிறாள். அப்போது, ஒன்னும் இல்லடா இனி ஈஸ்வரி காலத்துக்கும் ஜெயில்லதான் இருக்கனும். ஜெயிலில் இருந்து வர முடியாது என்று சொல்கிறாள். அதன்பிறகு கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு வர அங்கு எழில் பாக்யா, ராமமூர்த்தி ஆகியோர் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர்.

அந்த நேரத்தில் கோபியை பார்த்த ராமமூர்த்தி இங்க எதுக்குடா வந்த என்று கேட்டு அடிக்க, இந்த சண்டையை பார்த்த போலீஸ் அவர்களை திட்டுகின்றனர். மேலும் ஈஸ்வரியை கோர்ட்டுக்கு அழைத்து செல்வதாகவும் அங்கு போய் பேசிக்கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிடுகின்றனர். அதன்பிறகு மொத்த குடும்பமமும் கோர்ட்டுக்கு செல்கிறது. ஈஸ்வரி அழுதுகொண்டே ஜீப்பில் ஏற அத்துடன் எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment