Advertisment

விரட்டியத்த ராதிகா, கோபியை மீட்ட செழியன்; மீண்டும் பாக்யா வீட்டில் தஞ்சமா?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiyalasmi
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரிக்கு கொலைகாரி பட்டம் கொடுத்து வெளியில் அனுப்பிய ராதிகாவும் அவரது அம்மா கமலாவும் தற்போது கோபியையும் வெளியில் அனுப்பும் முடிவுக்கு வந்துவிட்டனர். இதனால் சீரியலில் அடுத்து என்ன நடக்கும், கோபியின் நிலைமை என்னவாகும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ராதிகா. கமலா மயூ ஆகிய மூவரும் வெளியில் கிளம்ப, கோபி எங்கே போறீங்க என்று கேட்கிறான். அதற்கு மயூ செக்கப் போகிறோம் என்று சொல்ல, நான் மறந்தே போய்விட்டேன் நானும் வருகிறேன் என்று கோபி, சொல்ல, உங்களுக்கு ஏன் வீண் சிரமம், நீங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க, நாங்க பார்த்துக்கொள்கிறோம். உங்களுக்கு உங்க அம்மா பத்தி யோசிக்கவே நேரம் இருக்காது என்று கமலா சொல்கிறார்.

இதற்கிடையே கோபி, நீங்க போங்க மயூ எதற்காக கூட்டிக்கிட்டு போறீங்க என்று கேட்க, அவளை எப்படி தனியா விட்டுட்டு போக முடியும் என்று கமலா கேட்க, நான் தான் வீட்டில் இருக்கிறேனே நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கோபி சொல்கிறான். இதை கேட்ட கமலா உங்களை நம்பி எப்படி விட்டுட்டு போறது, திடீர்னு உங்க அம்மா கூப்பிட்ட நீங்க போய்டுவீங்க, என்று கமலா சொல்ல, கோபி, அத்தை டூமச்சா பேசுறீங்க. என்று சொல்லிவிட்டு மயூவை அழைக்கிறான்.

அதே சமயம் ராதிகா மயூவை அழைத்துக்கொண்டு கமலாவுடன் கிளம்பி சென்றுவிடுகிறாள். ஹாஸ்பிடல் போய்ட்டு திரும்பி வந்தவுடன், கோபி என்ன சொன்னாங்க என்று கேட்க, நிம்மதியா எதை பற்றியும் யோசிக்காமல் இருக்க சொன்னாங்க என்று சொல்லும் கமலா, ஆன உங்க வீட்ல எப்படி இருக்க முடியும். உங்க அம்மா பண்ண வேலை அப்படி என்று ஈஸ்வரி பற்றி பேச. எல்லை மீறி போறீங்க என்று  கோபி டென்ஷன் ஆகிறான்.

இதை கேட்ட ராதிகா அப்படித்தான் பேசுவோம். நடந்ததை தான் சொல்கிறோம். இங்க இருக்க முடிஞ்சா இருங்க இல்லனா வெளியில போய்டுங்க என்று சொல்ல, கோபி அதிர்ச்சியாகிறான். மறுபக்கம் கும்பகோணம் சென்ற ஈஸ்வரி, தனது பழைய நினைவுகளை பற்றியும் பழைய தோழி பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறாள். ராதிகாவிடம் திட்டு வாங்கிய கோபி, பாரில் குடித்துக்கொண்டு, ராதிகா பற்றி தனது நண்பரிடம் சத்தமாக சொல்லிக்கொண்டு இருக்க மற்றவர்கள் கடுப்பாகி கோபியிடம் சண்டைக்கு வருகின்றனர்.

அந்த நேரம் பார்த்து எழில், செழியன் அங்கு வர, எழில் செழியனிடம் அங்கு போக வேண்டாம் என்று சொல்ல, இல்லை இப்படியோ போக கூடாது என்று சொல்லி சண்டைக்கு வந்தவர்களிடம் பேசி சமாதானம் செய்கிறான். அப்போது செழியன் கோபியை காரில் ஏற்றுவதை பார்த்து எழில் கோபப்படுகிறான் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment