Advertisment

2 நாள் டைம், உங்க அம்மாவை அனுப்பிடுங்க : கோபிக்கு கெடு வைத்த ராதிகா ; அடுத்து என்ன நடக்கும்?

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரியை கூட்டிச்சென்ற கோபிக்கு கடுமையாக சோதனை ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Baakiyalasmi

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது அம்மா ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு ராதிகா வீட்டுக்கு சென்ற கோபி, கடுமையான சோதனைகளை சந்தித்து வரும் நிலையில், ராதிகா அவனுக்கு 2 நாட்கள் கெடு விதித்துள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி, பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், பாக்யா சொந்தமான ரெஸ்டாரண்ட் வைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

மறுபக்கம் கோபி பிஸினஸை விட்டுவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு பாக்யாவுக்கு எதிரான ஹோட்டல் தொடங்கியுள்ளார். அதே சமயம் தனது மனைவியுடன் பாக்யா வீட்டில் தங்கியிருந்த கோபி, ராதிகா கர்ப்பமாக விஷயம் தெரிந்ததால், மகன்களால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் பாக்யாவை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது அம்மா ஈஸ்வரியையும் கூட்டிக்கொண்டு வெளியேறினார் கோபி.

இங்கு ராதிகா வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ராதிகாவின் அம்மா கமலாவுடன் மோதலில் இருக்கிறார். வீட்டில் இருப்பது 2 அறைதான் இதில் ஒன்றில் கோபியும், ராதிகாவும் தூங்க மற்றொன்றில் கமலாவும், மயூவும் தூக்கிக்கொண்டிருந்த நிலையில், தற்போது ஈஸ்வரி வந்துவிட்டதால், அந்த அறையில் அவர் தங்கிக்கொள்ள, கமலாவும் மயூவும் வெளியில் ஹாலில் படுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ராதிகா அவரின் அம்மா கமலா இருவரும் கோபி மீது கோபத்தில் உள்ளனர்.

சமீபத்தில் வெளியான ப்ரமோவில், எனக்கு பாட்டியுடன் படுத்தால் தான் தூக்கம் வரும் என்று மயூ சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல், ராதிகா வீட்டுக்குள் சென்றுவிடுகிறார். கமலா மயூவை பார்த்துக்கொள்ள, ராதிகா பின்னாடியே செல்லும் கோபியிடம், உங்கா அம்மா ஹாயா பெட்ல தூங்குவாங்க என் பொண்ணு தரையில் தூங்கனுமா? நீங்க என்ன செய்வீஙகளே தெரியாது இன்னும் 2 நாளில் உங்க அம்மா இங்கிருந்து போய்டனும் என்று கோபியிடம் சொல்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியாக கோபி அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கிறார். பாக்யா வீட்டில் என்ன கேட்டாலும் அடுத்த நொடி கிடைக்கும் என்ற நிலையில், இருந்த ஈஸ்வரி இங்கு காபிக்கும், தண்ணிருக்கும் கமலா ராதிகாவிடம் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment