கமலாவை அடிக்க கை ஓங்கிய கோபி: சட்டையை பிடித்து கேள்வி கேட்ட ராதிகா; அடுத்து என்ன நடக்குமோ!

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா - கோபி இடையே மோதல் அதிகமாகியுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிாபார்ப்பு எழுந்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா - கோபி இடையே மோதல் அதிகமாகியுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிாபார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
radhika Gopu Backia
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தனது அம்மா பற்றி தவறாக பேசிய ராதிகாவின் அம்மா கமலாவை அடிக்க கோபி கை ஓங்கிய நிலையில், எங்க அம்மாவை எப்படி அடிக்கலாம் என்று ராதிகா கோபியின் சட்டையை பிடித்துவிட்டார்.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டு பாக்யா வீட்டிலேயே தங்கியிருந்த கோபிராதிகா கர்ப்பமானது வீ்ட்டிற்கு தெரிந்ததால்ராதிகா மற்றும் தனது அம்மாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பாக்யாவை பழிவாங்க ஈஸ்வரியை கூட்டி வந்த கோபிக்குஈஸ்வரியை சமாளிக்க முடியாமல் திணறினார்.

கடந்த வார எபிசோட்டில்ராதிகா தடுக்கி விழுந்ததால்அவரின் கர்ப்பம் கலைந்த நிலையில்ஈஸ்வரிதான் தன்னை தள்ளிவிட்டார் என்று கோபியிடம் சொல்லகோபியும் ஈஸ்வரியை திட்டி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறிய ஈஸ்வரியை மீண்டும் தனது வீட்டுக்கே கூட்டிச்சென்ற பாக்யாகோபி உங்களை புரிந்துகொள்வார் என்று ஆறுதல் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து  ஈஸ்வரியை ஆறுதல்படுத்துவதற்காகஅவரை கும்பகோணத்திற்கு அழைத்து சென்றுள்ள பாக்யாஈஸ்வரியின் நெருங்கிய தோழியை வரவழைத்து ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இதனிடையே ஈஸ்வரியை வெளியில் அனுப்பிய கோபியிடம்பாக்யா சத்தம்போடஅதில் அப்சட்டான கோபி மீண்டும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த்தால் ராதிகா அவன் மீது கோபத்தில் இருந்தார்.

Advertisment
Advertisements

அதன்பிறகு பாரில் குடித்தவிட்டு சண்டை போட்டுக்கொண்டிருந்த கோபியை மீட்ட செழியன் எழில் இருவரும் கோபியை வீட்டில் வந்து விட்டுச்சென்ற நிலையில், தற்போது ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் எங்க அம்மாவை பற்றி தவறாக பேசினீர்கள் என்றால் என்று கூறிக்கொண்டு ராதிகாவின் அம்மா கமலாவை அடிக்க கை ஓங்கிக்கொண்டு செல்கிறார் கோபி. இதை பார்த்து கமலா மிரண்டுபோய் நிற்கிறார். இதை பார்த்து ராதிகாவும், கோபியை சத்தம் போடுகிறார்.

ஒரு கட்டத்தில் கோபி தன் கையை இறக்க, இப்போ எங்க அம்மா என்ன தப்பா சொல்லிட்டாங்க, நடந்த்தை தானே சொன்னாங்க என்று சொல்ல, கோபி ராதிகா வேண்டாம் என்று எச்சரிக்கை, நீங்க எப்படி எங்க அம்மாவை அடிக்கலாம் என்று கோபியின் சட்டையை பிடித்த கேள்வி கேட்கிறாள் ராதிகா. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: