Advertisment

பாக்யாவுக்கு சவால் விட்ட ராதிகா: இனியாவை கோர்ட்டுக்கு இழுப்பாரோ! பாக்யலட்சுமி சீரியலில் இன்று!

பொய்யான புகார் கொடுத்தது ராதிகா அந்த தவறே அவருக்கு தெரியல. ஆனால் உண்மையை சொல்ல மயூவை கூட்டிக்கொண்டு வந்தது தவறா?

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi Promo Weast

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில், ஈஸ்வரி மீது சுமத்தப்பட்டது பொய்யான புகார் என்று மயூ சாட்சி சொன்னதை தொடர்ந்து, ஈஸ்வரி விடுதலை செய்யப்பட்ட நிலையில், அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்க போகிறது என்பது தொடர்பான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் ப்ளவர்வாஷ் தடுக்கி விழுந்ததால் ராதிகாவின் கர்ப்பம் கலைந்துவிட்ட நிலையில், ஈஸ்வரி தள்ளிவிட்டு தான் அவரின் கப்பம் கலைந்துவிட்டது என்று சொல்லி ராதிகாவின் அம்மா கமலா கொடுத்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் முழுவதும் இது தொடர்பான எபிசோடுகளே ஒளிபரப்பாகி வந்த நிலையில், ஈஸ்வரி ஜெயிலுக்கு செல்வரா உண்மை வெளி வருமா என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், பார்க்கில் பாக்யாவை சந்தித்த மயூ ராதிகா ப்ளவர்வாஷ் தடுக்கிதான் விழுந்தார் என்று உண்மையை சொன்ன நிலையில், ராதிகாவுக்கு தெரியாமல் மயூவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த பாக்யா ஈஸ்வரியை நிரபராதி என்று விடுதலை செய்ய வைத்தார்.

தவறான புகார் கொடுத்து மாட்டிக்கொண் ராதிகா, அந்த கோபத்தை தனது அம்மா கமலாவிடம் காட்ட அவரோ பாக்யா மீது பழியை திருப்ப முயற்சி செய்து வருகிறார். அதேபோல், மயூ சாட்சி உண்மையை சொன்னது பிடிக்காத ராதிகா, பாக்யா மீது கோபத்தில் இருக்கும் நிலையில், அடுத்து வரும் எபிசோட்டுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் தான் அம்மா பேச்சை கேட்டுக்கொண்டு பொய்யான புகார் கொடுத்ததை விட, உண்மையை சொன்ன மயூவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தது தவறு என்பது போல் பேசுகிறார் ராதிகா.

ப்ரமோவின் தொடக்கத்தில், ராதிகாவுடன் இருக்கும் மயூவை பார்த்து பாக்யா பேச போக, அவரை தடுக்கும் ராதிகா, யாரை கேட்டுவிட்டு என் மகளை கோர்ட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தீங்க, இதேபோல் ஒரு பிரச்சனை வரும்போம்போது, நான் உங்கள் மகளை அழைத்துக்கொண்டு கோர்ட்டுக்கு போனால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கேட்க, நான் யோசித்து பார்த்தேன் ஆனால் எனக்கு வேற வழி தெரியவில்லை என்று பாக்யா சொல்கிறாள்.

இதை கேட்ட ராதிகா, காலம் ஒரு மாதிரி இருக்காது எனக்கும் வாய்ப்பு வரும் அப்போது நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு மயூவை கூட்டிக்கொண்டு செல்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பொய்யான புகார் கொடுத்தது ராதிகா அந்த தவறே அவருக்கு தெரியல. ஆனால் உண்மையை சொல்ல மயூவை கூட்டிக்கொண்டு வந்தது தவறா என்ன சீரியல் இது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment