பழனிச்சாமியால் கடுப்பான கோபி... பாக்யா கொடுத்த மரண அடி : பாக்கியலட்சுமி பரபரப்பு

கோபி மாடிக்கு சென்று பால்கனியில் நிற்கும்போது பாக்யா பழனிச்சாமியை வழியனுப்பி வைக்கிறார்.

கோபி மாடிக்கு சென்று பால்கனியில் நிற்கும்போது பாக்யா பழனிச்சாமியை வழியனுப்பி வைக்கிறார்.

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கோபி கேரக்டர் செய்யும் அலப்பறைகள் சீரயிலில் காமெடி இல்லாத குறையை தீர்த்து வைத்து வருகிறது. அதிலும் பழனிச்சாமி கேரக்டர் பாக்யாவுடன் பழகிய நாட்களில் இருந்து கோபியின் சந்தேக புத்தி காமெடியின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.

Advertisment

இதனிடையே பாக்யா வீட்டுக்கு பழனிச்சாமி பெண் பார்க்க வந்த சம்பவத்தை ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ள கோபி வீட்டு வாசலில் பாக்யாவும் – பழனியும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகிறார். அப்போது அவரை பார்க்கும் பழனிச்சாமியும் இங்கிலீஷில் பேச கோபி செம்ம கடுப்பில் அங்கிருந்து கிளம்புகிறார். உள்ளே சென்றால் பழனிச்சாமியின் அம்மா ராமமூர்த்தி – ஈஸ்வரியிடம் பேசிக்கொண்டிருக்கினறனர்.

ரொம்ப நல்லவங்க நீங்கள வீட்டுக்கு வர மருமகளை நல்லபடியா பார்த்துப்பீங்க. நீங்க எங்க வீட்ல சம்மந்தம் பண்ண வேண்டும் என்பதால் தான் இவ்வளவு நாள் கல்யாணம் தள்ளிப்போயுள்ளது. இப்போது நாம சம்மந்தி ஆக போகிறோம் என்று ராமமூர்த்தி சொல்ல இதை கேட்டு அதிர்ச்சியாகும் கோபி, உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அதை இந்த லேம்போஸ்ட்டுக்கு கட்டிக்கொடுத்த அப்போதான் நீங்க சம்மந்தி என்று மனதிற்குள் நினைத்துக்கொள்கிறார்.

இதையெல்லாம் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் கோபி மாடிக்கு சென்று பால்கனியில் நிற்கும்போது பாக்யா பழனிச்சாமியை வழியனுப்பி வைக்கிறார். அப்போது செழியன் அங்கு வர என்னடா நடக்குது இங்க அந்த லேம்போஸ்ட்க்கு நம்ப வீட்ல வச்சி பொண்ணு பாக்குராங்க என்று கேட்க, அதற்கு செழியன் நான் பேசனும்னு நெனச்சேன் அதுக்குள்ள போய்ட்டாரா நான் மீட்டிங்கல மாட்டிக்கிட்டேன் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் உங்களை மாதிரி இல்லை என்று சொல்லிவிட்டு செல்கிறான் செழியன்.

Advertisment
Advertisements

இதை கேட்டு கோபி இந்த வீட்டில் இவன் மட்டும் தான் நல்லா இருந்தான். இப்போ இவனும் இப்படி ஆகிட்டானா என்று புலம்புகிறார். அதன்பிறகு கீழே வந்து கிச்சனில் இருக்கும் பாக்யாவிடம் நீ பண்ற எதுவுமே சரியில்லை. அந்த பனை மரத்தை நம்ம வீட்டுக்கு பொண்ணு பாக்க வர சொல்லிருக்க என்று கேட்க, அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என்று பாக்யா கேட்கிறார். நீ சரியில்லை பாக்யா உன்னை என்னமோனு நெனச்சேன் என்று சொல்ல, கடுப்பாகும் பாக்யா என்னை நீங்க நினைக்கவே வேண்டாம்னு சொல்றேன். நீங்க யாரு என்பனை பற்றி நினைக்க அடுத்த பொண்ணுங்க என்ன பண்றாங்கனு பாக்குறதுதான் வேலையாக என்று கேட்கிறாள்.

அதற்கு கோபி பிரச்சனை வேண்டாம் நீ பண்றது சரியில்லை என்று மீண்டும் தொடங்க அதிரடியாக கோபப்படும் பாக்யா எல்லா நேரமும் அமைதியாக இருக்க மாட்டேன். மொதல்ல இங்க இருந்து கௌம்புங்க என்று சத்தம்போட்டு அனுப்பி வைக்கிறாள். அடுத்து இனியாவிடம் போனால் அவளும் பழனிச்சாமிக்கு சப்போர்ட் செய்கிறாள். இதனால் ஷாக் ஆகும் கோபியிடம் என்னடா தனியா நின்னு பொலம்பிக்கிட்டு இருக்க என்று ராமமூர்த்தி கேட்கிறார்.

அடுத்து நைட் ரூமில் இருக்கும்போது ராதிகா என்ன கோபி எதாவது பிரச்னையா ஒரு மாதிரி இருக்கீங்க என்று கேட்க ஒன்றும் இல்லை என்று சொல்லி தப்பித்துவிடுகிறார் கோபி. அதன்பிறகு ராதிகா வீட்ல எதும் விஷேஷமா? கல்யாண பேச்சுலாம் நடக்குது என்று கேட்க, அதற்கு கோபி கல்யாணம்னு காதுல விழுந்துச்சுல யாருக்கு கல்யாணம்னு கேட்ட ஷாக் ஆகிருவ என்று சொல்ல ராதிகா யாருக்கு என்று கேட்க பாக்யாவுக்கு என்று சொல்கிறான். இதை நம்பாமல் ராதிகா முழிக்க அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: