Advertisment

பாக்யாவுக்கு பாராட்டு... கோபிக்கு ஷாக்... முழு வில்லனாக ஜோசப் : அடுத்து என்ன நடக்கும்?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
baakiya Gopi

பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

2-வது திருமணத்திற்கு பின் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள கோபி, கம்பெனியை இழுத்து மூடிவிட்டார். பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. கிரிடிட் கார்டு பில் கட்டவில்லை என தொடர்ந்து நெருக்கடியில் இருந்து வருகிறார். இந்த பக்கம் கண்காட்சி கேண்டீனை சிறப்பாக நடத்தி பாராட்டுக்களை பெற்ற பாக்யா அடுத்து ரெஸ்டாரண்ட் தொடங்க இருக்கிறார்.

பாக்யாவின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் கோபி, அதை பொறுத்துக்கொள்ள முடியாமல், தனது நண்பன் சதீஷூன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறான். அப்போது ராமமூர்த்தி ஈஸ்வரி இருவரும் ஹாலில் உட்கார்ந்திருக்க, அவர்களிடம் மாட்டிககொள்ளாமல் சென்றுவிட வேண்டும் என்று கோபி யோசிக்க, இங்க வந்து கொஞ்சம் உட்காருப்பா என்று ஈஸ்வரி சொல்கிறாள்.

அம்மா பேச்சை தட்டாத கோபி, வந்து உட்கார்ந்துகொண்டு, வாய்யை திறக்காமல் இருக்கிறான். அந்த நேரத்தில் கீழே வரும் ராதிகா, கோபியின் முகத்தை பார்த்து சந்தேகப்பட, பேச்சில் வித்தியாசம் கண்டுபிடிக்கிறார். ஆனால் தொண்டை சரியில்லை என்று சமாளித்தாலும், ராதிகா கண்டுபிடித்துவிடுகிறார். அதன்பிறகு மாடிக்கு வாங்க என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிடுகிறாள்.

ராமமூர்த்திக்கும் கோபி மீது சந்தேகம் வந்த நிலையில், கோபி தான் சுடுதண்ணீர் வைக்க வேண்டும் என்று கிச்சனில் அடுப்பை பற்றவைக்க முயற்சித்து அலப்பறை செய்கிறார். அப்போது அங்கு வரும் ராதிகா, அவனை இழுத்துக்கொண்டு போய் கடுமையாக திட்டி தீர்க்கிறார். இதனிடையே செழியன் ஜெனிக்கு அனுப்பிய கடிதத்தை  ஜெனியின் அப்பா கிழித்துவிட, அதை ஒட்டவைத்து படிக்க ஜெனி முயற்சிக்கிறார். அதையும் ஜோசப் கிழித்துவிடுகிறார்.

மறுநாள் காலை வாக்கிங் செல்லும்போது, கோபி வெளியில் நிற்க, ராமமூர்த்தி குடியை நிறுத்து என்று அட்வைஸ் செய்கிறார். அப்போது வரும் பாக்யா ராமமூர்த்தியை அழைக்க, அங்கு வரும் சிலர் பாக்யாவிடம் நலம் விசாரிக்கின்றனர். பாக்யா ரெஸ்டாரண்ட் தொடங்க இருப்பதற்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். பெரிய ஆளா ஆகிட்டீங்க என்று புகழ்ந்து பேச, கோபி அருகில் இருந்துக்கொண்டு பொறாமை படுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment