கோபிக்கு சரியான பதிலடி... இந்த அவமானம் உங்களுக்கு தேவையா? பாக்கிலட்சுமி சீரியலில் இன்று

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன?

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi Serial

பாக்கியலட்சுமி சீரியல்

தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisment

எபிசோட்டின் தொடக்கத்தில் ராதிகாவிடம் பேசிக்கொண்டிருக்கும் கோபி, எனது அம்மா பசங்கள் என அனைவருமே, என்னைப்பற்றி கவலைப்படுகிறார்கள். இவர்கள் எனக்கு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்ல, இந்த லிஸ்டில் நமது பெயர் வரவில்லையே என்று ராதிகா கோபியிடம் சண்டை போடுகிறார். இருவருக்கும் இடையே மோதல் முற்றுகிறது.

அதன்பிறகு, ஈஸ்வரி டி.வி பார்த்துக்கொண்டிருக்கும்போது, அங்கு அப்பா மகன் குறித்த பாடல் ஒலிக்க, செழியன் தனது குழந்தையை நினைத்து வருத்தப்பட்டு ஓடுகிறான். இவனை பார்த்த பாக்யா ஆறுதல் சொல்கிறார். அதனைத் தொடர்ந்து பாக்யாவை சந்திக்கும்கோபி, நீ தொடங்கிய பிஸினஸ் அனைத்தும் பாதியில் முடிந்துள்ளது. அதுபோல் இதுவும் பாதியில் தான் முடிய போகிறது என்று சொல்ல, பாக்யா அங்கிருந்து கிளம்ப நினைக்கிறாள்.

அவளை விடாத கோபி, இந்த ரெஸ்டாரண்ட் ஓப்பனிங்கும் அப்படித்தான் இருக்கும் என்று சொல்ல, கடுப்பான பாக்யா, முட்டி மோதினாலும் இப்போது என்னிடம் வேலை இருக்கிறது. சிலருக்கு அதுகூட இல்லை. வீட்டில் பல அவமானங்களை தாண்டி நான் என் பிள்ளைகள் மாமனார் மாமியார் என அனைவரையும் நன்றாக பார்த்தக்கொள்கிறேன். கூடவே நானும் வேலை செய்கிறேன். சிலர் டிப்டாப்பா டிரெஸ் பண்ணிட்டு வந்து சாப்பிட்டுவிட்டு அப்படியே போய்டுவாங்க. 

Advertisment
Advertisements

இப்படிப்பட்டவர்கள் ஆபீஸில் தான் இப்போது பெரிய பூட்டு தொங்குது என்று சொல்ல, கோபி டென்ஷன் ஆகிறான். அதை பார்த்த பாக்யா, பார்த்து பார்த்து பிபி எகிறி ஹார்ட் அட்டாக் வந்துவிட போகிறது. அப்புறம் ஹார்ட் பேஷன்ட் ஆகிடுவீங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்து ரெஸ்டாரண்ட் திறப்புவிழா இன்வடேஷன் கொடுக்க, ஜெனி வீட்டுக்கு செல்லும் பாக்யாவுக்கு ஜெனி அம்மா அப்பா இருவரும் அவமானத்தை கொடுக்கின்றனர்.

இதை கேட்டு அமைதியாக பொறுத்துக்கொள்ளும் பாக்யா, வழக்கு கோர்ட்டில் உள்ளது. அதே சமயம் ஜெனி மீது எனக்கு அக்கரை இருக்கிறது. அதனால் தான் இன்வடேஷன் கொடுக்க வந்தேன். இது என் கடமை. வருவதும் வராததும் ஜெனியின் இஷ்டம். என்று சொல்லிவிட்டு இன்வடேஷனை அங்கு வைத்துவிட்டு செல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: