/indian-express-tamil/media/media_files/1IykOyM9kEauZyUYHrgN.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
விவாகரத்து கேஸ்க்காக அம்மா பாக்யாவுடன் கோர்ட்டுக்கு வந்த செழியன் ஜெனியின் பேச்சை கேட்டு அதிர்ச்சியாகிறான். இனிமேல் இவனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று அவள் சொல்லிவிட, நீதிபதி அவர்களுககு 2 நாட்கள் அவசாகம் கொடுத்து அனுப்புகிறார், வரும் வழியில், பாக்யா செழியனுக்கு ஆறுதல் சொல்ல, அவனோ நார்மலாக நாம் வீட்டுக்கு போக வேண்டாம். ரெஸ்டாரண்ட் போகலாம் என்று சொல்கிறான்.
இதை கேட்ட பாக்யா ஷாக் ஆக, எனக்கு நம்பிக்கை இருக்குமா! ஜெனி நான் இல்லாமல் இருக்க மாட்டாள் கண்டிப்பாக அவளும் நானும் சேர்ந்து வாழ்வோம் என்று சொல்கிறான். வீட்டில் உள்ள அனைவரும் இவர்கள் வரவை எதிர்பார்க்க, இவரும் வருகின்றனர். அப்போது கேஸ் என்ன ஆச்சு என்று கேட்க, ஜெனி வரவில்லை. அதனால் கேஸை தள்ளி வைத்துவிட்டார்கள் என்று சொல்கிறான். இதை கேட்டு பாக்யா ஷாக் ஆகிறாள். ஆனாலும் செழியன் அவளிடம் கண்ணை காட்டிவிட்டு உள்ளே செல்கிறான்.
அடுத்த நாள் அனைவரும் ரெஸ்டாரண்ட் ஓப்பனிங் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, நடக்காத ஃபங்கஷனுக்கு எப்படியெல்லாம் ப்ளான் போடுறாங்களே என்று கோபி மனதிற்குள் சந்தோஷப்பட, அத்தை நீங்கள் சீக்கிரம் வந்துவிடுங்கள் அமைச்சர் பக்கத்தில் நீங்கள் தான் இருக்க வேண்டும் என்று சொல்ல, என்னை வேலைக்கு கூப்பிட்டேல்ல, இப்போ எப்படி அசிங்கப்பட போற பாரு என்று போகி மனதிற்குள் நினைத்துக்கொள்கிறான்.
ஆனால் என்ன ஒன்னு உன்னோடு சேர்ந்து என் குடும்பத்தினரும் குறிப்பாக என் அம்மாவும் அசிங்க்பபட போறாங்கனு நினைக்கும்போது தான் கஷ்டமா இருக்கிறது என்று நினைக்க அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.