Advertisment

பாக்யாவை ஏமாற்றிய அமைச்சர்... குதூகலமான கோபிக்கு கடைசியில் நடந்த ட்விஸ்ட் : பாக்கியலட்சுமி அப்டேட்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்து என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Baakiyalakshmi Serial

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisment

பாக்யாவின் ரெஸ்டாரண்டை திறக்க அமைச்சர் வரமாட்டார் என்ற குஷியில் கோபி சுற்றிக்கொண்டிருக்க, அவன் நினைத்தது போலவே, ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவில் குழப்பம் ஏற்படுகிறது. இதை பார்த்து கோபி ரொம்பவே சந்தோஷப்பட, பாக்யா அமைச்சர் அலுவலகத்திற்கு போன் செய்து கேட்கிறாள். அப்போது அமைச்சர் புரோகிராம் மாறிவிட்டது. அவர் ஒரு ஸ்கூல் பங்ஷன் போய்ருக்காகங்க என்று சொல்கின்றனர்.

இதனால் மனமுடைந்த பாக்யா, என்ன செய்வது என்று தெரியாமல், மாமா அத்தையிடம் இது பற்றி சொல்லாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே இருக்க, பின்னாடியே வந்த எழில் என்ன என்று விசாரிக்கிறான். அமைச்சர் வரமாட்டார் என்ற விஷயத்தை பாக்யா சொல்ல, எழில் அதிர்ச்சியாகிறான். இதை கேட்டு அமிர்தாவும், ஜெனியும், அமைச்சர் வரலனா என்ன, தாத்தா பாட்டி வைத்து ஓபன் பண்ணலாமே என்று சொல்கின்றனர்.

இங்கு நடப்பதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கோபி, இந்த நேரத்தில் நாம் சென்றால் தான் சரியாக இருக்கும் என்று யோசித்து, வருகிறான். ஈஸ்வரியிடம் வந்து, என்னமா கூட்டமே இல்ல, இந்த பக்கமா வந்தேன். அப்படியே அமைச்சர் வருவதை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன். என்னமா இன்னும் அமைச்சர் வரலையா என்று கேட்டுவிட்டு, அவங்க வரமாட்டாங்க, இவ ஒரு தடவை போய் சமைத்துவிட்டு வந்தால், உடனே இவர் கூப்பிட்டவுடன் வந்துவிடுவார்களா என்று ஈஸ்வரியை ஏற்றிவிடுகிறான்.

கோபியின் பேச்சை கேட்டு டென்ஷன் ஆன ராமமூர்த்தி சும்மா நிறுத்துடா எரியர இடத்தில் வந்து குளிர் காயலாம்னு பார்க்கிறாயா என்று கேட்கிறார். பாக்யா வந்து அமைச்சர் வரமாட்டாங்களாம். அதனால் நீங்களும் மாமாவும் திறந்து வைத்துவிடுங்கள் என்று சொல்ல, அதுக்கென்னமா நாங்களே திறந்து வைக்கிறேம் என்று ராமமூர்த்தி சொல்கிறார். இதற்கிடையே அமைச்சர் தனது அலுவலகத்திற்கு போன் செய்ய, அங்கிருப்பவர் பாக்யா போன் செய்தாக சொல்கிறார்.

இதை கேட்ட அமைச்சர், இன்னைக்கு ரெஸ்டாரண்ட் திறப்பு விழா என்பதை ஞாபகப்படுத்தாத பி.ஏ.வை திட்டிவிட்டு உடனடியாக பாக்யா பக்ஷனுக்கு கிளம்புகிறார். இங்க ராமமூர்த்தி ரெஸ்டாரண்டை ஓபன் செய்ய போக, அப்போது திடீரென பத்திரிக்கையாளர்கள் வருகிறார்கள். பின்னாடியே அமைச்சரும் வர கோபி அதிர்ச்சியாகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment