/indian-express-tamil/media/media_files/3b2CfJtnFskt8QvTlcfs.jpg)
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், பாக்யா ராதிகா இருவரும் கிச்சனில் சமைத்துக்கொண்டிருக்க, கோபி கோபமாக வீட்டுக்கு வருகின்றான். அவனை பார்த்த ஈஸ்வரி என்னாச்சு என்று கேட்க, ஜோசப் தன்னை பார்த்து ஜெனிக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், விவாகரத்து கிடைத்த மறுநாளெ ஜெனிக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறேன் என்று சொன்னதாக சொல்கிறான்.
இதை கேட்ட செழியன், கோபத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி ஜெனி வீட்டுக்கு சென்று, எனக்கு ஜெனி வேண்டும் என்று சொல்லி, என்ன ஜெனி கல்யாணம் பண்ணிக்க எப்படி ஒத்துக்கிட்ட என்று கேட்க, அவள் பதில் சொல்வதற்குள், நீ எதுக்கு இங்க வந்த என்று ஜோசப், செழியனை அடித்து வெளியில் தள்ளுகிறார். ஆனாலும் செழியன் வந்து மீண்டும் பாப்பா ஜெனி இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்று சொல்கிறான்.
அதை கேட்ட ஜோசப் மீண்டும் செழியனை அடித்து வெளியில் தள்ளி கதவை சாத்துகிறான். இதனால் செழியன் சோகமாக கேட் அருகே அமர்ந்திருக்க, போன பையனை காணோமே என்று பாக்யா தவித்துக்கொண்டிருக்க, ராமமூர்த்தி என்ன என்று விசாரிக்க, செழியனை பற்றி சொல்கிறான். ஆமாம் இதை நான் யோசிக்கவே இல்லையே என்று சொல்ல, பாக்யா எழிலிடம் போன் செய்து விஷயத்தை சொல்கிறாள்.
இதை கேட்டு எழில் ஜெனி வீட்டுக்கு வர, செழியன் காயத்துடன் அமர்ந்திருக்கிறான். அப்போது என்னாச்சு என்று கேட்க, ஜெனிக்கு கல்யாணம் என்று சொல்ல, உனக்கு முகத்தில் காயமா இருக்கு யார் அடிச்சா என்ற கேட்கிறான் எழில். ஜோசப் அடித்ததை செழியன் சொல்ல, நான் என்னானு கேட்கிறேன் என்று சொல்லி எழில் கிளம்புகிறான். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.