/indian-express-tamil/media/media_files/kZUIrsslu4i182oPC2Hn.jpg)
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் நடந்நதது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில், செழியனுக்கு பெண் பார்க்க, ஈஸ்வரி தரகரை அழைத்து பேசிய நிலையில், இன்று செழியனை பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். மாப்பிள்ளை பார்க்க வந்தவர்கள் பெண் போட்டோவை செழியனிடம் காட்ட, அவன் போட்டோவை பார்க்காமல் மாடிக்கு சென்றுவிடுகிறான். இதை பார்த்த பெண் வீட்டார் ஏன் மாப்பிள்ளைக்கு பெண் பிடிக்கவில்லையா என்று கேட்கின்றனர்.
பெண் வீட்டாரின் கேள்விக்கு கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று ஈஸ்வரி பதில் சொல்லும்போது, பாக்யா என்ட்ரி கொடுக்கிறார். அவரும் பெண் வீட்டாரை பார்த்து அதிர்ச்சியடைய, பெண்ணின் போட்டோவை பார்காமலே செழியனை பார்க்க மாடிக்கு சென்றுவிடுகிறாள். செழியனை கீழே அழைத்து வந்து இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்ல, சொல்ல, செழியன் அமைதியாக இருக்கிறான்.
இதனால் கடுப்பான பாக்யா அவனுக்கு ஜெனி குழந்தைகளுடன் இருக்கத்தான் ஆசை. இந்த திருமணத்தில் அவனுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லும் பாக்யா செழியன் ஜெனிக்கு இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை. அவர்களை சேர்த்து வைக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம் என்று சொல்கிறாள். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சியடைகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.