ராதிகாவை சேர்த்துக்கொண்ட பாக்யா... மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய ஈஸ்வரி : அடுத்து என்ன ?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Radhika Backia

விஜய் டிவியின் பாக்கிலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

ஹோட்டலில் இருந்து அமிர்தா செல்வி இருவரும் போன் செய்ய பாக்யா போனை எடுக்காததால் என்ன நடந்தது என்று தெரியாமல் இருவரும் யோசித்துக்கொண்டிருக்கின்றனர். அதன்பிறகு வரும் பாக்யா எழில் இருவரும் ஜெனி – செழியன் இருவரும் சேர்ந்துவிட்டார்கள் என்று சொல்ல, செல்வி ரொம்ப சந்தோஷப்படுகிறாள். மேலும் அமிர்தா எழில், ஜெனி – செழியன் இருவர் பிரச்சனையும் அக்கா தீர்த்துவைத்துவிட்டார் என்று சொல்கிறாள்.

செல்வியின் பேச்சை கேட்ட அமிர்தா சரியா சொன்னீங்க என்று சொல்லி சந்தோஷப்படுகிறாள். இதனையடுத்து ராமமூர்த்தி – பாக்யா இருவரும் ஜெனி செழியன் பிரச்சனை குறித்து பேசிக்கொண்டிருக்க, ராதிகா இதை கேட்டுக்கொண்டிருக்கிறாள். அதேபோல் சோபாவில் அமர்ந்து இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கும் ஈஸ்வரி, செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பண்றதா பேச்சு எடுத்த பிறகுதான் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கு என்று சொல்கிறாள்.

மேலும் நான் என்ன பேசினால் இந்த வீட்டில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும். அதனாலதான் செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண வேண்டும் என்று பேசியதாக ஈஸ்வரி சொல்கிறாள். இதை கேட்டு பாக்யா அமைதியாக இருக்க, கிச்சனுக்கு வரும் ராதிகா, செழியன் ஜெனியை சேர்ந்து வைக்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க, ஆனா அத்தை எல்லாம் அவங்க செஞ்ச மாதிரி பேசிட்டு போறாங்களே உங்களுக்கு கோபம் வரவில்லையா என்று கேட்கிறாள்.

Advertisment
Advertisements

இதை கேட்ட பாக்யா, இதெல்லாம் என்ன புதுசா எனக்கு பழகிடுச்சி, நம்ம அத்தை தானே என்று ஈஸியாக எடுத்துப்பேன் என்று சொல்ல, ராதிகா நம்ம அத்தையா என்று கேட்க, பாக்யா சிரித்தபடியே எனக்கு வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறாள். சமைத்து முடித்த பாக்யா யாரும் சாப்பிட வரவில்லை என்று பார்த்துவிட்டு மேலே சொல்ல, அங்கே செழியன் – ஜெனி – எழில் அமிர்தா, இனியா நிலா எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது கீழே வரும் செழியன் எல்லாத்துக்கும் நீதான் அம்மா காரணம் என்று சொல்லி கட்டிபிடித்து கண்கலங்க அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: