Advertisment

ஈஸ்வரிக்கு ஷாக் கொடுத்த எழில்... கோபிக்கு ரெஸ்டாரண்ட்க்கு சிக்கல் : பாக்யா ஹேப்பி

பாக்யாவின் ரெஸ்டாரண்ட் பிரச்சனை தீர்ந்துள்ள நிலையில், கோபிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Baakiya Ewas

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில், பாக்யாவின் பிரச்சனை தீர்ந்துள்ள நிலையில், எழில் ஈஸ்வரியிடம் வாக்குவாதம் நடத்த, பாக்யாவும் அவனுக்கு சப்போர்ட் செய்கிறாள்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ஈஸ்வரி, ராமமூர்த்தி, பாக்யா மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, கீழே இறங்கி வரும் எழில், அமிர்தாகிட்ட என்ன கேட்டீங்க என்று ஈஸ்வரியடம் கேட்க, எல்லார் வீட்டிலேயும் கேட்கிறத தான் நானும் கேட்டேன் என்று சொல்கிறாள். இனிமேல் அமிர்தாவிடம் குழந்தை பற்றி எதுவும் கேட்காதீங்க என்று சொல்ல, அதுக்குள்ள ஒன் பொண்டாட்டி உன்ட சொல்லிட்டாளா என்று ஈஸ்வரி தப்பாக பேசுகிறாள்.

ஈஸ்வரியின் பேச்சால் கோபமான எழில், என் அடிங்க, திட்டுங்க, என்னிடம் கோபப்படுங்க, ஆனால் அமிர்தாவிடம் எதுவும் கேட்காதீங்க. குழந்தை விஷயத்தில் முடிவு செய்வது நானும் அமிர்தாவும் தான். அதில் நீங்கள் தலையிடாதீங்க என்று எழில் சொல்ல, அதிர்ச்சியான ஈஸ்வரி, என்ன பிள்ளை வளர்த்து வச்சிருக் என்று கேட்கிறாள். இதை கேட்ட பாக்யா, நான் நல்லாதன் வளர்த்திருக்கிறேன். உங்க பையனுக்கு நீங்கள் சொல்லி கொடுக்காததை நான் என் மகனுக்கு சொல்லி கொடுத்திருக்கிறேன்.

இப்போ காலம் மாறிவிட்டது. யாரும் கல்யாணம் ஆன உடனே குழந்தை பெற்றுக்கொள்வது இல்லை. அவர்களுக்கு எப்போ தோணுதோ அப்போ பெற்றுக்கொள்கிறார்கள். என் பையனுக்கு எது சரினு தோணுதோ அதை பண்ணட்டுமே, அவன் பொண்டாட்டிக்கு அவன் சப்போர்ட்டாக பேசுவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதனால் நான் அவன் பக்கத்தில் தான் இருப்பேன் என்று சொல்லி ஈஸ்வரியை அவமானப்படுத்த, ஈஸ்வரி கோபித்துக்கொண்டு ரூமுக்கு சென்றுவிடுகிறாள்.

அதன்பிறகு நான் எதுவும் தப்பாக பேசிவிடவில்லையே மாமா என்று ராமமூர்த்தியிடம் கேட்க, நீ சரியதான் மா பேசுன, ஈஸ்வரிதான் எல்லார் மேலையும் இருக்க பாசத்தில் தேவையில்லாமல் பேசுறா என்று சொல்லிவிட்டு அவரும் ரூமுக்கு போய்விடுகிறார். அடுத்ததாக பாக்யாவின் ரெஸ்டாரண்ட் பக்கத்தில் பார்கிங் ஏரியாவுக்காக பேசி ந்த பிரச்சனையை தீர்த்து வைக்கிறார் பழனிச்சாமி. இதற்காக பாக்யா சந்தோஷப்பட, மறுபுறம், கோபியின் ரெஸ்டாரண்ட்க்கு 150 சாப்பாடு ஆர்டர் வருகிறது. ஆனால் அனைவரும் வேலை செய்யாமல் இருக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சியான கோபி என்ன என்று விசாரிக்க, இன்று செஃப் லீவு, என்று சொல்ல, கோபிக்கு மேலும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் அங்கு யாருக்கும் சமைக்க தெரியாது என்பதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், ராதிகாவுக்கு போன் செய்ய, என்னால ஒன்னும் பண்ண முடியாது. நான் மீட்டிங்கில் இருக்கிறேன் என்று சொல்லி போனை வைத்துவிடுகிறாள்.

அடுத்த சில நிமிடங்களில் சாப்பாடு ஆர்டர் கொடுத்தவர் இன்னும் சாப்பாடு வரவில்லை என்று சொல்லிவிட்டு கோபமாக போனை வைத்துவிட, என்ன செய்வது என்று தெரியாத கோபி, ஈஸ்வரிக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறான். இதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சியாக அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment