Advertisment

பாக்யா தான் என் மருமகள்... உறுதி செய்த பழனிச்சாமி அம்மா : ஈஸ்வரி என்ன சொல்ல போகிறாரோ!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் லவ் ட்ராக் வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Baakiya pamal

பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கணவன் 3 குழந்தைகள் மாமனார் மாமியார் என மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த குடும்பத்தில், பாக்யா தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக மசாலா கம்பெனி தொடங்கி நடத்தி வந்தார்.

Advertisment

இதனிடையே கணவன் கோபி, பாக்யாவை விட்டுவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு 2-வது மகன் எழில் திருமணம், மகள் இனியாவின் படிப்பு என அனைத்தையும் கவனித்து வந்த பாக்யா, சமீபத்தில் தனது மகன்கள் வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளை சரி செய்து முடித்தார். இதனால் இந்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதேபோல் மசாலா கம்பெனியில் தொடங்கிய பாக்யாவின் பிஸினஸ் தற்போது தனியாக ரெஸ்டாரண்ட் வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. மறுபக்கம் தனது முன்னாள் மனைவியின் முன்னேற்றத்தை பார்த்து பொறாமையில் இருக்கும் கோபி, அடுத்து பாக்யாவுக்கு எதிராக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். இதனிடையே தான் பழனிச்சாமிக்கு பாக்யாவின் மீது காதல் மலர்ந்துள்ளது.

கோபி 2-வது திருமணம் செய்துகொண்டதால் அடுத்து பாக்யா பழனிச்சாமி திருமணத்துடன் சீரியல் முடிவுக்கு வர உள்ளது என்று கூறப்படுகிறது. தற்போது பழனிச்சாமியின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கான சமையல் வேலையை பாக்யா பார்த்துக்கொண்டு இருக்கிறார். பழனிச்சாமியின் அக்கா தங்கை என அனைவருமே பிறந்தநாள் விழாவுக்கு வந்துள்ள நிலையில், பழனிச்சாமிக்கு பாக்யா தான் மனைவி என்று அவரின் அம்மா தனது மகள்களிடம் சொல்கிறார்.

இதை கேட்டு பழனிச்சாமியின் அக்கா ஓகே சொல்ல, அவரின் தங்கையோ, அவருக்கு திருமணமாகி ஒரு மகனுக்கு குழந்தையே இருக்கிறது என்று சலிப்பாக சொல்ல, எப்படி இருந்தாலும் பாக்யாதான் எனது மருமகள் என்று சொல்லிவிடுகிறார். இதனால் அடுத்து பாக்யா – பழனிச்சாமி காதல் தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்ப்படுகிறது.

இதனிடையே செழியன் செய்த தவறை மனதில் வைத்திருக்கும் ஜெனி, அவனை சந்தேகப்படுவதாக எழிலிடம் சொல்லி ஃபீல் பண்ண, இது கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்று எழில் ஆறுதல் கூறுவது போன்று இன்றைய எபிசோடு அமைந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒன்றிணையும்போது சீரியல் முடிவக்கு வரும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment