/indian-express-tamil/media/media_files/rgybRvkryh9t6A7FA3a7.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மகன்களின் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ள பாக்யா மீது பழனிச்சாமிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாக்யாவின் மகள் இனியா மீது, பழனிச்சாமியின் அக்கா மகன் விமலுக்கு காதல் மலர்ந்துள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சீரியலின் இன்றைய எபிசோட்டில், பழனிச்சாமி என் அம்மா, தெரு முழுக்க வாழை மரம் கட்டி, சீரியல் செட் போட்டு பிரம்மாண்டமாக கொண்டாடலாம் என்று சொன்னார். நான்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என சொல்ல, ஒரு டி.ஜே.மியூசிக் வைத்திருக்கலாம் என்று சொல்ல, ஸ்பீக்கர் எல்லாம் இருக்கு போன் வைத்து பாட்டு போட்டா முடிச்சிடும் என்று சொல்ல, இனியா சந்தோஷமாகிறாள்.
அப்போது ராமமூர்த்தி நல்ல ஒரு பழைய பாட்டா போடுங்க் என்று சொல்ல, அதெல்லாம் முடியாது இப்போது ட்ரெண்டு பாட்டு தான் போடனும் என்று இனியா சொல்லி பாட்டை போட, பழனிச்சாமியின் அக்கா மகன் விமல், ஆடிக்கொண்டே மாடியில் இருந்து கீழே வர, பாக்யாவின் குடும்பத்தினர் மத்தியில் குத்தாட்டம்போடுகிறான். அதன்பிறகு ஈஸ்வரி, ராமமூர்த்தி ஆகியோரிடம் இது எனது அக்கா மகன் என்று பழனிச்சாமி அறிமுகம் செய்து வைக்கிறார்.
எல்லோரிடமும் சகஜமாக பேசிய விமல், இனியாவை மெய் மறந்து பார்க்க, அவளே வெட்கத்தில் தலைகுணிகிறாள். அதன்பிறகு இனியா பேசிக்கொண்டிருக்க, அவரிடம் சென்று விமல் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறான். இதனிடையே பாக்யாவிடம் திருமணம் பற்றி பேசலாம் என்று பழனிச்சாமியின் அக்கா சொல்ல, அவரின் தங்கையே இப்போது வேண்டாம் அது சரியாக இருக்காது என்று சொல்லிவிடுகிறார். அதற்கு பதிலாக அவரி்ன் அத்தையிடம் பேசலாம் என்று சொல்கிறார்.
அப்போது அங்கு ஈஸ்வரி வந்து என்ன பேச போறீங்க என்று கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லி சமாளித்துவிடுகின்றனர். அதன்பிறகு உன் போன் நம்பர் காலேஜ் என விமல் விசாரிக்க, அதெல்லாம் சொல்ல முடியாது என்று இனியா சொல்ல, நீ சொல்ல வேண்டாம் நானே கண்டுபிடிக்கிறேன் என்று விமல்’ சொல்ல, நீ பாக்யாவை பழனிச்சாமிக்கு கட்டிவைக்க பாக்குற, ஆனா உன் பையன் அவன் கல்யாணத்திற்கு தயாராகிறான் என்று பழனிச்சாமியின் தங்கை அவரது அக்கவிடம் சொல்கிறாள்.
சரி என்னதான் நடக்குது என்று பார்ப்போம் என்று கூறி, இனியா விமல் இருவரையும் வீட்டிற்குள் அழைக்கின்றனர். அப்போது பழனிச்சாமி கேட் வெட்ட அனைவரும் போட்டோ எடுத்துக்கொள்கின்றனர். பாக்யா அங்கு வேலை செய்துகொண்டிருப்பதை பார்க்கும் பழனிச்சாமி அவரை அழைத்து போட்டோ எடுத்துக்கொள்ள அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.