Advertisment

வெட்கத்தில் ஓடிய பழனி... பாக்யாவுக்கு ஐடியா வேறயா இருக்கே! பிரச்னை வெடிக்குமா?

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baaki Pamak

பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பழனிச்சாமிக்கு பாக்யா மீது காதல் வந்துவிட்டது. அதே சமயம் பாக்யாவின் சிந்தனை பழனிச்சாமி குறித்து வேறு மாதிரியாக இருப்பதால், கதையில் விரைவில் ஒரு பெரிய பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பழனிச்சாமியின் பிறந்த நாள் விழாவில் சமையல் செய்த பாக்யா, வழக்கம்போல் சமையலில் அசத்த, பழனிச்சாமியின் மொத்த குடும்பமும் அவரை பாராட்டி தீர்க்கிறது. இதில் பாக்யாவை பழனிச்சாமிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று விரும்பும், அவரின் அம்மாவுக்கு பழனிச்சாமியின் சகோதரிகளும் பச்சை கொடி காட்டிவிட்டனர்.

இதனிடையே கேக் வெட்டி கொண்டாட்டம் தொடங்கிய நிலையில், போட்டோஸ் எடுக்கும்போது பாக்யாவை வலியனாக அழைத்து பழனிச்சாமி போட்டோ எடுத்துக்கொள்கிறார். இதை பார்த்து பழனிச்சாமியின் அம்மா மற்றும் சகோதரிகள் மகிழ்ச்சியடைய, பழனிச்சாமியின் இளைய சகோதரி கொஞ்சம் காட்டமாகவே இருக்கிறார். இதனையடுத்து அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது பழனிச்சாமியின் திருமணப்பேச்சு அடிப்படுகிறது. அப்போது அம்மாவை பார்த்துக்கொள்ள வேண்டும், சகோதரிகளை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். எனக்கு என்ன பிடிக்கும் என்பது நான் சொல்லாமலே அவருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று பழனிச்சாமி சொல்ல, இவை அனைத்தையும் பாக்யா செய்வதை பார்த்துக்கொண்டு இருக்கிறார். இதனால் பாக்யா மீது பழனிச்சாமிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.

அப்போது செல்வியும் லோபிகாவும், இவர்களின் ஜோடிப்பொருத்தம் பற்றி பேசிக்கொண்டு, இவர்கள் இருவரும் சேர்ந்தால் சூப்பராக இருக்கும் என்று சொல்கின்றனர். அதனைத் தொடர்ந்து பங்ஷன் முடிந்து பாக்யா குடும்பம் அவர்களின் வீட்டுக்கு கிளம்புகின்றனர். அப்போது பழனிச்சாமியின் அம்மா பாக்யாவை அழைத்து சமையலுக்கான பணத்தை கொடுக்க, அதை வாங்க மறுக்கும் பாக்யா, என்னை ஏன் அந்நியப்படுத்துறீங்க, சார் எனக்கு எவ்வளவோ பண்ணிருக்காரு. இது நான் அவரின் பிறந்த நாளுக்கு கொடுத்த பரிசு என்று சொல்கிறார்.

அதை சொல்லிவிட்டு பாக்யா கிளம்பிவிட, பழனிச்சாமி பாக்யாவை நினைத்து சிரித்துக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்த அவரின்  அம்மா அக்கா இருவரும் உனக்கு பிடிச்சிருக்குல்ல, பேசி முடிச்சிடுவோம் என்று சொல்ல, சும்மா இருங்க என்று சொல்லிவிட்டு வெட்கப்பட்டு ஓடுகிறார் பழனிச்சாமி. இங்கு வீட்டில் பழனிச்சாமி கல்யாணத்திற்கு மாமியார் ஈஸ்வரியிடம் பெண் பார்க்குமாறு பாக்யா சொல்லிக் கொண்டிருக்கிறார். அத்துடன் எபிசோடு முடிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment