Advertisment

ராதிகா கர்ப்பம்? காதல் மயக்கத்தில் பழனிச்சாமி : இதெல்லாம் எங்கே போய் முடியுமோ!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் – அமிர்தா குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோட்டில் ராதிகா வாந்தி எடுப்பதால், அதை வைத்து அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கோபி கலாய்த்து வருகிறார்.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாக்யா பழனிச்சாமி காதலை ஏற்றுக்கொள்வாரா, இந்த உண்மை தெரிந்தால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்துது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், அமிர்தாவின் அம்மா அமிர்தாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைதான் ஆனால் மாப்பிள்ளை தான், இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்வதாக ஈஸ்வரியிடம் சொல்கிறார். இதை கேட்ட ஈஸ்வரி, இவன் அப்படிதான் நான் ஒன்று கேட்டால் அவன் ஒன்று சொல்வான் என்று திட்டுகிறார். அதன்பிறகு நான் மாப்பிள்ளையிடம் பேசுகிறேன் என்று அமிர்தாவின் அம்மா சொல்கிறார்.

இந்த நேரம் பார்த்து எழில் அங்கு வர, அமிர்தாவின் அம்மாவை பஸ் ஏற்றி விடுவதற்காக அழைத்து செல்கிறார். இந்த பக்கம் பாக்யாவின் ஞாபகத்தில் சிரித்துக்கொண்டே இருக்கும் பழனிச்சாமியிடம் அவரது அம்மா மற்றும் அக்கா இருவரும் பாக்யாவை பார்த்தியா என்று கேட்க, ஆமாம் என்று பழனிச்சாமி சொல்கிறார். இதை கேட்ட அம்மா, கல்யாணத்தை பற்றி பேசலாமா என்று கேட்க, இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.

இதை கேட்ட பழனிச்சாமியின் அம்மா அக்கா இருவரும் கல்யாணம் பற்றி பேச நேரம் காலம் இல்லை. அதற்காக நேரத்தில் பேசிவிட வேண்டும் என்று சொல்ல, பாக்யா ஞாபகத்தில் பழனிச்சாமி பாட்டு பாடிக்கொண்டே அங்கிருந்து கிளம்புகிறார். அதன்பிறகு இங்கு செல்வி, பாக்யாவின் முகத்தை பார்த்து சிரித்துக்கொண்டே இருக்க, பாக்யா என்ன என்று கேட்கிறார். உன்னையும் பழனிச்சாமி அண்ணனையும் நினைத்து பார்த்தேன் என்று சொல்ல, பாக்யா வழக்கம்போல் செல்வியை திட்டிவிடுகிறார்.

அமிர்தாவின் அம்மாவை பைக்கில் கூட்டி போகும் எழிலிடம் அவர் குழந்தை பற்றி கேட்க, அது நானும் அமிர்தாவும், பேசி முடிவெடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் கொடுக்கும் ப்ரஷரில் நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது. அமிர்தாவுக்கும் நிலாவுக்கும் எந்த பிரச்சனையும் வராது என்று சொல்கிறான். அடுத்து ரெஸ்டாரண்ட்க்கு வரும் ராதிகா கோபியிடம் பேசிக்கொண்டிருக்க, கோபி ராதிகாவுக்காக ப்ரைடு ரைஸ் ரெடி பண்ணி வைத்துவிட்டு சாப்பிட போகும்போது செப் அங்கிருந்து கிளம்புகிறார்.

அப்போது கோபி அவரிடம் நாளைக்கு வந்துடுவீங்கள்ள என்று கேட்டுவிட்டு, உங்கள் வீட்டு அட்ரஸ் எனக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க என்று சொல்கிறார். இதனால் ராதிகா அப்சட் ஆகிறார். அமிர்தாவின் அம்மாவை பஸ் ஏற்றி விட்டுவிட்டு வீட்டுக்கு வரும் எழில் ஈஸ்வரியிடம் குழந்தை பற்றி அமிர்தா அம்மாவிடம் என்ன பேசுனீங்க என்று கேட்க, நான் பேசியதில் என்ன தப்பு என்று ஈஸ்வரி கேட்கிறார்.

அதை கேட்ட எழில் இனிமேல் இந்த வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பேசாதீங்க என்று சொல்ல, நீங்க குழந்தை பெற்றுக்கொள்ளும் வரைக்கும் நான் பேசுவேன் என்று சொல்கிறார். அத்துடன் எபிசோடு முடிய நாளைய எபிசோட்டில், ராதிகா திடீரென வாந்தி எடுக்க, கோபி என்னாச்சு என்று விசாரிக்கிறார். ஒன்னும் இல்ல சாப்பிட்டது ஒத்துக்கல என்று ராதிகா சொல்ல, உன் முகத்தை பார்த்தால் அப்படி தெரியலையே என்று கோபி சொல்கிறார். இதனால் நாளைய எபிசோடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment